கூகுள் தற்போது புதிதாக ஒரு சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. பிற்காலத்தில் எங்கேனும் இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டு தகவல் தொடர்புகள் கிடைக்க இயலாத நிலையில் ஆகாய மார்க்கமாக மீட்புப் பணிகளில் ஈடுபட உதவக்கூடும் வகையில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது கூகுள் நிறுவனம். அத்துடன் இதன் மூலம் இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் எப்போதும் பெறும் விதத்தில் செய்ல்படப் போகும் ஒரு புதிய முயற்சி என்றும் கூகுள் நிறுவனம் இதைக் குறிப்பிடுகிறது. அதாவது ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட 30 பலூன்களில் இணையதள தொடர்புகளை அளிக்ககூடிய கருவிகள் பொருத்தப்பட்டு விண்வெளியில் பறக்கவிடப்படுள்ளது. அவற்றின் பாதை தரையிலிருந்து கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் இதுவரை எந்த வசதிகளுமில்லாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் கூட இனி இணையதள வசதிகளைப் பெறமுடியுமாம்.
Join the forum, it's quick and easy