நவீன சொகுசு விமானம் என்ற அடைமொழியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட போயிங் 787-8 ரக டிரீம்லைனர் விமானங்களில் சமீப சாலமாக சில தொழில் நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன.
இதனைத் தொடர்ந்து, உலக நாடுகளில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் டிரீம்லைனர் விமானங்களை இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அமெரிக்க விமானச் சேவை ஆணையம் அறிவுறுத்தியது. இந்த அறிவிப்பை தொடர்ந்து உலக நாடுகள் 50 விமானங்களை முடக்கி வைத்துள்ளன.
போயிங் நிறுவனத்திடம் 27 டிரீம்லைனர் விமானங்களை வாங்க ஏர் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதுவரை 6 விமானங்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. அந்த விமானங்கள் தற்போது இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நிதி நிலைமையை சீரமைக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு வாங்க இருக்கும் விமானங்கள் உள்பட 27 டிரீம்லைனர் விமானங்களையும் விற்றுவிட ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட டிரீம்லைனர் விமானங்களின் உள்ளூர் சேவையை நாளை (புதன்கிழமை) முதல் தொடங்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக புதுடெல்லியில் பேட்டியளித்த விமான போக்குவரத்து துறை மந்திரி அஜீத் சிங் கூறியதாவது:-
டிரீம்லைனர் போயிங் 787 விமானங்களில் ஏற்பட்ட பேட்டரி கோளாறு சீர் செய்யப்பட்டதையடுத்து ஏர் இந்தியாவின் டிரீம்லைனர் உள்நாட்டு விமானச்சேவை நாளை தொடங்குகிறது.
முதல் கட்டமாக டெல்லியில் இருந்து கொல்கத்தாவிற்கு நாளை டிரீம்லைனர் விமானம் இயக்கப்படும். ஏர் இந்தியாவின் இதர 4 டிரீம்லைனர்கள் இம்மாத இறுதிக்குள் இயக்கப்படும்.
டிரீம்லைனர்களின் சர்வதேச விமானச் சேவை வரும் 22ம் தேதி முதல் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, உலக நாடுகளில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் டிரீம்லைனர் விமானங்களை இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அமெரிக்க விமானச் சேவை ஆணையம் அறிவுறுத்தியது. இந்த அறிவிப்பை தொடர்ந்து உலக நாடுகள் 50 விமானங்களை முடக்கி வைத்துள்ளன.
போயிங் நிறுவனத்திடம் 27 டிரீம்லைனர் விமானங்களை வாங்க ஏர் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதுவரை 6 விமானங்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. அந்த விமானங்கள் தற்போது இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நிதி நிலைமையை சீரமைக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு வாங்க இருக்கும் விமானங்கள் உள்பட 27 டிரீம்லைனர் விமானங்களையும் விற்றுவிட ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட டிரீம்லைனர் விமானங்களின் உள்ளூர் சேவையை நாளை (புதன்கிழமை) முதல் தொடங்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக புதுடெல்லியில் பேட்டியளித்த விமான போக்குவரத்து துறை மந்திரி அஜீத் சிங் கூறியதாவது:-
டிரீம்லைனர் போயிங் 787 விமானங்களில் ஏற்பட்ட பேட்டரி கோளாறு சீர் செய்யப்பட்டதையடுத்து ஏர் இந்தியாவின் டிரீம்லைனர் உள்நாட்டு விமானச்சேவை நாளை தொடங்குகிறது.
முதல் கட்டமாக டெல்லியில் இருந்து கொல்கத்தாவிற்கு நாளை டிரீம்லைனர் விமானம் இயக்கப்படும். ஏர் இந்தியாவின் இதர 4 டிரீம்லைனர்கள் இம்மாத இறுதிக்குள் இயக்கப்படும்.
டிரீம்லைனர்களின் சர்வதேச விமானச் சேவை வரும் 22ம் தேதி முதல் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.