KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.

Join the forum, it's quick and easy

KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.
KALAKALAPPU TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
KALAKALAPPU TAMIL CHAT

TAMIL CHAT ROOM WITH VOICE, VIDEO, KARAOKE & LYRICS | NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM FOR TAMIL COMMUNITY.

For Updates Via FACEBOOK Just Click ’LIKE" Button
KALAKALAPPU TAMIL CHAT
Latest topics
» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.
ரூ.35 கோடி செலவில் ஐ.டி.ஐ. மாணவர்கள் அனைவருக்கும் லேப்-டாப்: ஜெயலலிதா EmptyTue May 27, 2014 2:37 pm by ctnsivani

» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.
ரூ.35 கோடி செலவில் ஐ.டி.ஐ. மாணவர்கள் அனைவருக்கும் லேப்-டாப்: ஜெயலலிதா EmptyTue May 27, 2014 2:36 pm by ctnsivani

» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.
ரூ.35 கோடி செலவில் ஐ.டி.ஐ. மாணவர்கள் அனைவருக்கும் லேப்-டாப்: ஜெயலலிதா EmptyTue May 27, 2014 2:35 pm by ctnsivani

» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு
ரூ.35 கோடி செலவில் ஐ.டி.ஐ. மாணவர்கள் அனைவருக்கும் லேப்-டாப்: ஜெயலலிதா EmptyThu May 22, 2014 4:09 pm by ctnsivani

» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.
ரூ.35 கோடி செலவில் ஐ.டி.ஐ. மாணவர்கள் அனைவருக்கும் லேப்-டாப்: ஜெயலலிதா EmptyThu May 22, 2014 4:04 pm by ctnsivani

» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே
ரூ.35 கோடி செலவில் ஐ.டி.ஐ. மாணவர்கள் அனைவருக்கும் லேப்-டாப்: ஜெயலலிதா EmptyThu May 22, 2014 2:34 pm by ctnsivani

» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்
ரூ.35 கோடி செலவில் ஐ.டி.ஐ. மாணவர்கள் அனைவருக்கும் லேப்-டாப்: ஜெயலலிதா EmptyThu May 22, 2014 2:32 pm by ctnsivani

» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி
ரூ.35 கோடி செலவில் ஐ.டி.ஐ. மாணவர்கள் அனைவருக்கும் லேப்-டாப்: ஜெயலலிதா EmptyTue May 20, 2014 6:27 pm by ctnsivani

» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது
ரூ.35 கோடி செலவில் ஐ.டி.ஐ. மாணவர்கள் அனைவருக்கும் லேப்-டாப்: ஜெயலலிதா EmptyTue May 20, 2014 6:25 pm by ctnsivani

» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்
ரூ.35 கோடி செலவில் ஐ.டி.ஐ. மாணவர்கள் அனைவருக்கும் லேப்-டாப்: ஜெயலலிதா EmptyTue May 20, 2014 6:24 pm by ctnsivani

» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து
ரூ.35 கோடி செலவில் ஐ.டி.ஐ. மாணவர்கள் அனைவருக்கும் லேப்-டாப்: ஜெயலலிதா EmptyTue May 20, 2014 6:23 pm by ctnsivani

» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி
ரூ.35 கோடி செலவில் ஐ.டி.ஐ. மாணவர்கள் அனைவருக்கும் லேப்-டாப்: ஜெயலலிதா EmptyTue May 20, 2014 6:22 pm by ctnsivani

» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்
ரூ.35 கோடி செலவில் ஐ.டி.ஐ. மாணவர்கள் அனைவருக்கும் லேப்-டாப்: ஜெயலலிதா EmptySat May 17, 2014 3:43 pm by ctnsivani

» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு
ரூ.35 கோடி செலவில் ஐ.டி.ஐ. மாணவர்கள் அனைவருக்கும் லேப்-டாப்: ஜெயலலிதா EmptySat May 17, 2014 3:33 pm by ctnsivani

» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி
ரூ.35 கோடி செலவில் ஐ.டி.ஐ. மாணவர்கள் அனைவருக்கும் லேப்-டாப்: ஜெயலலிதா EmptySat May 17, 2014 2:34 pm by ctnsivani

TOTAL VISITORS
Free Counter
Free Counter
Forum Live Users

You are not connected. Please login or register

ரூ.35 கோடி செலவில் ஐ.டி.ஐ. மாணவர்கள் அனைவருக்கும் லேப்-டாப்: ஜெயலலிதா

Go down  Message [Page 1 of 1]

Geetha_Latha

Geetha_Latha
Admin

முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகள் மாவட்ட அளவில் தொழிலாளர் அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதுரை மாவட்டம் நீங்கலாக பிற மாவட்டங்களில் இவ்வலுவலகங்கள் தற்போது வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இவ்வலுவலகங்களுக்கு தொழிலாளர்கள் அதிக அளவில் வருவதால் மாவட்டந்தோறும் போதுமான உள் கட்டமைப்பு வசதியுடன் கூடிய சொந்த கட்டடம் கட்டுதல் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு,

முதற்கட்டமாக திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர், வேலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மற்றும் நீலகிரி ஆகிய 20 மாவட்டங்களில் உள்ள சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் அலுவலர் அலுவலகங்களுக்கு சொந்த அலுவலக கட்டடங்கள் 40 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டித்தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் தொழிலாளர் துறையை சார்ந்த பிற அலுவலகங்களுக்கும் இக்கட்டிடங்களில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.

தொழில் உறவு சீராக இருந்தால் தான் உற்பத்தித் திறன் அதிகரிக்க முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிர்வாகவியல் சட்டங்களை மனித வள மேலாண்மை மற்றும் தொழிலுறவு அலுவலர்கள் அனைவரும் தெளிவாகத் தெரிந்து கொள்ள உதவும் வகையில் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் என்ற ஓராண்டு பகுதி நேர பட்டயப் படிப்பு 2013-14 ஆம் கல்வியாண்டு முதல் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பணியில் உள்ளவர்கள் பயனடையும் வகையில், இப்பட்டயப் படிப்புக்கான வகுப்புகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் நடைபெறும். இப்படிப்பில் 50 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமுதாய வளர்ச்சி ஆகியவற்றிற்கு முக்கிய காரணிகளாக விளங்கும் தொழில் திறன் மற்றும் அறிவுத் திறன் ஆகியவற்றை உருவாக்கு வதில் ஐ.டி.ஐகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இங்கு பயிலும் மாணவர்கள் உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் பயிற்சி பெற்றிட அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. தற்போது, பள்ளிக் கல்வியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகளுடன் புத்தகங்கள் வாங்குவதில் பெற்றோருக்கு உள்ள சுமைகளைக் குறைத்திட பாடப் புத்தகங்களை அரசு வழங்கி வருகிறது.

இது போல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஐ.டி.ஐகளில் பயிற்சி பெற்று வரும் பயிற்சியாளர்களுக்கும் ஐ.டி.ஐ. பாடத் திட்டத்தின்படி வெளியிடப்படும் கருத்தியல் பாடப் புத்தகங்கள், செய்முறை விளக்கப் பாடப் புத்தகங்கள், பயிற்சிப் பாடப் புத்தகங்கள், கணித பாடப் புத்தகங்கள், வரைபட பாடப் புத்தகங்கள், வரை பட விளக்க செய்முறை பாடப் புத்தகங்கள், ஆங்கில புலமை மற்றும் பேச்சாற்றலை வளர்க்கும் பணித் திறன் வளர்ப்பு பாடப் புத்தகங்கள் மற்றும் மாணவர்கள் பொறியியல் வரை படங்களை வரைவதில் தக்க பயிற்சி பெற தேவையான உபகரணங்கள் ஆகியவை வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கென 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் அரசு ஐ.டி.ஐகளில் பயிலும் சுமார் 26,000 பயிற்சியாளர்கள், அரசு உதவிப் பெறும் ஐ.டி.ஐகளில் பயிலும் சுமார் 1,683 பயிற்சியாளர்கள் என மொத்தம் 27,683 பயிற்சியாளர்கள் பயன்பெறுவர்.

வேலைக்கு தகுதி பெறும் திறனை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள ஐ.டி.ஐகளில் அனைத்து தொழிற் பிரிவுகளிலும் பயிற்சி பெறுவோருக்கான பாடத் திட்டத்தில் மொழித் திறன், கணினித் திறன் மற்றும் மென்திறன் பயிற்சி குறித்த பாடப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இத்தகைய பயிற்சிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, அனைத்து அரசு ஐடிஐகளிலும் மொழி மற்றும் மென் திறன் ஆய்வகங்கள் 15 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆய்வகங்களை அமைக்க தேவைப்படும் இடங்களில் புதிய கட்டடம், மொழித் திறன் பயிற்சிக்கான மென்பொருள், கணிப் பொறிகள் மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஆகிய வற்றிற்கான செலவினங்கள் இதில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சுமார் 25,231 அரசு தொழிற் பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் பயன்பெறுவர்.

அரசு ஐடிஐகளில் தற்போது கணிப்பொறி தொடர்புடைய பிரிவுகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. கணிப்பொறி அல்லாத பிற தொழிற் பிரிவுகளில் பயிலும் ஐ.டி.ஐ மாணவர்கள் அனைவருக்கும் கணிப்பொறி பயிற்சி பெறுவது தற்போது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாலும், அரசு கல்லூரிகள், மேல் நிலைப் பள்ளி மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு அவர்கள் படிக்கும் பாடப் பிரிவுகளைக் கணக்கில் கொள்ளாது அனைவருக்கும் மடிக்கணினி வழங்கப்படுவதாலும், இதே அடிப்படையில், ஐடிஐகளில் பயிற்சி பெறும் அனைத்து தொழிற் பிரிவு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்பதையும் இதற்கென 35 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு ஐடிஐகளில் பல்வேறு தொழிற் பிரிவுகளில் தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் பேருந்து பயணச் சலுகை, 500 ரூபாய் மாத உதவித் தொகை, விலையில்லா மிதி வண்டி, 2 செட் சீருடை, 1 ஜோடி காலணி போன்ற சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

பள்ளிகளை பொறுத்த வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படுவதைப் போல, அரசு ஐடிஐ மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளான பேருந்து பயண சலுகை, 500 ரூபாய் மாத உதவித் தொகை,

விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி ஆகியவை, இனி அரசு உதவி பெறும் தனியார் ஐடிஐ மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்பதையும் இதற்கென 3 கோடியே 7 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 1,683 பேர் பயன் பெறுவர்.

தொழிற் பயிற்சி பெறுவதில் மகளிர் சிரமமின்றி பங்கு பெற வேண்டும் என மகளிருக்காக தனியாக 12 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இதில் 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கரூர் மகளிர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் இன்று வரை வாடகைக் கட்டடத்தில் வசதி குறைவுடன் இயங்கி வருகிறது. மகளிர் சிரமமின்றி தொழிற் பயிற்சி பெறும் வகையில், கரூர் மகளிர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு ஆய்வுக்கூடம், வகுப்பறை, அலுவலக அறை, நுலீலக அறை ஆகிய வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன் பயிற்சி வழங்கும் நோக்கில் இயங்கி வருகின்ற தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்ககம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரகக் கட்டடத்தில் ஒரு பகுதியில் இயங்கி வருகிறது.

திறன் பயிற்சிகளை வழங்குவதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, கிண்டி, மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வேலை வாய்ப்பு அலுவலக வளா கத்தில் தற்போது கட்டப்பட்டு செயல்பட்டு வரும் கட்டடத்தின் மேல் கூடுதலாக இரண்டு தளங்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கக அலுவலகத்திற்கு 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மட்டுமல்லாமல், அரசின் பல்வேறு துறைகளால் செயல்படுத்தப்படும் அனைத்து திறன் எய்தும் பயிற்சிகளுக்கு ஒருங்கிணைவு முகமையாக செயல் படும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையத்தின் மூலம், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரக்கூடிய சில்லறை வர்த்தகம், உபசரிப்பு மேலாண்மை, மருத்துவ சேவைகள், தானியங்கி, கட்டுமானம், ஓட்டுநர் பயிற்சி, பாது காவலர் பணிகள், தோல் மற்றும் தோல் பொருள்கள், ஜவுளி, தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், திறன் எய்தும் பயிற்சி, கைபேசி பழுது பார்த்தல், பற்ற வைத்தல், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு, கனரக பொறியியல், உணவு பதனிடுதல், வங்கி மற்றும் நிதி சேவைகள், ஆபரணக்கல் மற்றும் நகை தயாரித்தல் போன்ற 18 துறைகளில் நடப்பாண்டில் 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன் பயிற்சி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum