''அப்பப்பா... என்ன வெயில், என்ன வெயில்! போன வருஷத்தைவிட இந்த வருஷம் படுத்தி எடுக்குதே!’'
''ம்... லீவு வேற விட்டாச்சு. இந்த புள்ளைங்கள வெயிலுக்குப் போகாம மேய்க்கறதுக்குள்ள... போதும் போதும்னு ஆயிடுது!''
- கோடை பிறந்ததுமே இப்படிப்பட்ட தூற்றல்களும்... கவலைகளும் இங்கே சகஜம்.
இப்படிப்பட்ட பேச்சுகள் சமீபத்தில் என் காதில் விழுந்தபோது... 'உண்மையில், வெயிலைப் பார்த்து இந்த அளவுக்குப் பயப்படத்தான் வேண்டுமா... வெயில் பற்றி குழந்தைகளின் மனங்களில் எதிர்மறை எண்ணங்களை பதிக்கத்தான் வேண்டுமா?' என்று எனக்குத் தோன்றியது.
ஆண்டின் பாதிநாட்கள் பனி மூடிய பூமியில், வாழ்க்கையை சரிவர நடத்த முடியாமல்... விவசாயத்தையும் முழுமையாக செய்ய முடியாமல் தவிக்கும் நாடுகள் இந்த பூமியில் ஏராளம். வருஷம் 365 நாளும் விவசாயம் செய்ய உகந்த சூழல் நிலவும் நம்மைப் போன்ற நாடுகளைப் பார்த்து... அந்த குளிர் நாடுகள் ஏங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. வெள்ளைக்காரர்கள்... வெயில் நாடுகளுக்கு வந்ததும், குழந்தைகளாகி கடலிலும், கரையிலுமாக மாறி மாறிக் கிடப்பதை நம்மூர் கடற்கரைகளில்கூட பார்க்கிறோமே!
இதைப் பற்றி சித்தமருத்துவர் வேலாயுதத்திடம் பேசிக் கொண்டிருந்தபோது...
''வெயில், உயிரினங்களுக்கு கிடைத்த கொடை. குறிப்பாக, சருமம் மற்றும் எலும்புக்கு நல்லது. எலும்புகளை வலுவாக்கக்கூடிய வைட்டமின் டி எனும் அற்புத சத்து, வெயிலிலிருந்து கிடைக்கிறது. 'வைட்டமின் டி கிடைக்கும்' என்று சொல்லியே, ஏகப்பட்ட ஊட்டச்சத்து பானங்களை கூவிக்கூவி, குதிரை விலைக்கு விற்பனை செய்கிறார்கள். ஆனால், வீட்டு வாசலுக்கு வந்தாலே... சல்லிக்காசு செலவில்லாமல் அது கிடைத்துவிடுகிறதே!'' என்று சொன்னவர்,
''அதேசமயம், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது வெயிலுக்கும் பொருந்தும். காலையில் 10 மணி தொடங்கி, மதியம் இரண்டு மணி வரை சூரிய ஒளியின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால், உடலில் அமிலத் தன்மை அதிகமாகி, சருமப் பிரச்னைகள் வரும். அம்மை, காமாலை, வைரஸ் காய்ச்சல் போன்றவையும் வரக்கூடும். அந்த சமயத்தில் வெளியில் போகாமல் தவிர்க்கலாம். உடலில் தண்ணீர் சத்து குறையாமல் இருக்க, அடிக்கடி நீராகாரங்களை பருகுவதை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தலாம்'' என்று யோசனையும் தந்தார் வேலாயுதம்!
'வெயிலோடு விளையாடி... வெயிலோடு உறவாடி..' உடலை உரமாக்கும் வித்தையைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்போம்!
''ம்... லீவு வேற விட்டாச்சு. இந்த புள்ளைங்கள வெயிலுக்குப் போகாம மேய்க்கறதுக்குள்ள... போதும் போதும்னு ஆயிடுது!''
- கோடை பிறந்ததுமே இப்படிப்பட்ட தூற்றல்களும்... கவலைகளும் இங்கே சகஜம்.
இப்படிப்பட்ட பேச்சுகள் சமீபத்தில் என் காதில் விழுந்தபோது... 'உண்மையில், வெயிலைப் பார்த்து இந்த அளவுக்குப் பயப்படத்தான் வேண்டுமா... வெயில் பற்றி குழந்தைகளின் மனங்களில் எதிர்மறை எண்ணங்களை பதிக்கத்தான் வேண்டுமா?' என்று எனக்குத் தோன்றியது.
ஆண்டின் பாதிநாட்கள் பனி மூடிய பூமியில், வாழ்க்கையை சரிவர நடத்த முடியாமல்... விவசாயத்தையும் முழுமையாக செய்ய முடியாமல் தவிக்கும் நாடுகள் இந்த பூமியில் ஏராளம். வருஷம் 365 நாளும் விவசாயம் செய்ய உகந்த சூழல் நிலவும் நம்மைப் போன்ற நாடுகளைப் பார்த்து... அந்த குளிர் நாடுகள் ஏங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. வெள்ளைக்காரர்கள்... வெயில் நாடுகளுக்கு வந்ததும், குழந்தைகளாகி கடலிலும், கரையிலுமாக மாறி மாறிக் கிடப்பதை நம்மூர் கடற்கரைகளில்கூட பார்க்கிறோமே!
இதைப் பற்றி சித்தமருத்துவர் வேலாயுதத்திடம் பேசிக் கொண்டிருந்தபோது...
''வெயில், உயிரினங்களுக்கு கிடைத்த கொடை. குறிப்பாக, சருமம் மற்றும் எலும்புக்கு நல்லது. எலும்புகளை வலுவாக்கக்கூடிய வைட்டமின் டி எனும் அற்புத சத்து, வெயிலிலிருந்து கிடைக்கிறது. 'வைட்டமின் டி கிடைக்கும்' என்று சொல்லியே, ஏகப்பட்ட ஊட்டச்சத்து பானங்களை கூவிக்கூவி, குதிரை விலைக்கு விற்பனை செய்கிறார்கள். ஆனால், வீட்டு வாசலுக்கு வந்தாலே... சல்லிக்காசு செலவில்லாமல் அது கிடைத்துவிடுகிறதே!'' என்று சொன்னவர்,
''அதேசமயம், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது வெயிலுக்கும் பொருந்தும். காலையில் 10 மணி தொடங்கி, மதியம் இரண்டு மணி வரை சூரிய ஒளியின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால், உடலில் அமிலத் தன்மை அதிகமாகி, சருமப் பிரச்னைகள் வரும். அம்மை, காமாலை, வைரஸ் காய்ச்சல் போன்றவையும் வரக்கூடும். அந்த சமயத்தில் வெளியில் போகாமல் தவிர்க்கலாம். உடலில் தண்ணீர் சத்து குறையாமல் இருக்க, அடிக்கடி நீராகாரங்களை பருகுவதை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தலாம்'' என்று யோசனையும் தந்தார் வேலாயுதம்!
'வெயிலோடு விளையாடி... வெயிலோடு உறவாடி..' உடலை உரமாக்கும் வித்தையைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்போம்!