1. நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியாத வயதில் இருக்கும் நான்கு அல்லது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம்... ஃபேஸ் டச் (முகத்தில் தொடுவது), அன் ஃபேஸ் டச் (முகம் தவிர பிற இடங்கள் எல்லாம்) பற்றி சொல்லிக் கொடுங்கள். 'உன் னோட கழுத்துக்கு கீழ யாரை யும் தொடவிடாதே. அப்படி யாராவது தொட்டா... அம்மா கிட்ட வந்து சொல்லணும்' என்று சொல்லி வையுங்கள்.
2. 'அம்மா... மாமா என்னை கண்ட இடத்துல தொடறார்' என்று குழந்தை உங்களிடம் சொல்லும்பட்சத்தில், குடும்பத்தில் நம்பிக்கையானவரிடம் பேசி, இந்த விஷயத்தில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை யோசியுங்கள். இங்கே பிரச்னையே உறவுக்குள்ளிருந்துதான் என்பதால்... விஷயத்தை மிகக்கவனமாக கையாள வேண்டும்.
3. டியூஷன் அனுப்புகிறீர்களா... ஆசிரியர், அவருடைய இடம், சூழல் பற்றியெல்லாம் விசாரித்து வைத்துக் கொள்ளுங்கள் 'நீ மட்டும் இன்னிக்கு தனியா இருந்து படிச்சுட்டு போ' என்று சொன்னால் 'அம்மா திட்டுவாங்க சார்’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துவிடச் சொல்லுங்கள். தனியாக ஸ்பெஷல் கோச் என்பதெல்லாம் வேண்டவே வேண்டாம். தேவை எனும் பட்சத்தில், வீட்டுக்கு வரும் ஆசிரியராக பாருங்கள். 'டியூஷனைவிட எனக்கு நீ முக்கியம்' என்று உங்கள் வளர்ந்த பிள்ளைகளுக்குப் புரிய வையுங்கள்.
4. இது சம்மர் நேரம். பிள்ளைகளை தனியாக விளையாட விடாதீர்கள். பக்கத்து வீட்டில் அல்லது குழந்தைகளின் நண்பர்கள் வீட்டில் பெண்கள் இருந்தால் மட்டுமே அங்கு விளையாட அனுப்புங்கள். முடிந்தவரை உங்கள் வீட்டு முன்பாக கூட்டமாக விளையாடினால் மட்டுமே விளையாட அனுமதியுங்கள்.
5. ஸ்கூல் வேன் அல்லது பஸ்ஸில் உங்கள் குழந்தை பயணித்தால், கடைசி ஸ்டாப்பில் இறங்கும் வரை காத்திருக்காமல், அதற்கு முந்தின ஸ்டாப்பிங்கில் சென்று நின்று, அழைத்து வந்துவிடுங்கள். பெரிய குழந்தைகளாக இருந்தால்... சைக்கிளில் அனுப்புங்கள். நண்பர்களோடு கூட்டமாக வரச் சொல்லுங்கள்.
6. திடீரென பள்ளி விடுமுறை அறிவித்துவிட்டால், 'அம்மாவுக்கு டீச்சர் கால் பண்ணுவாங்க. நான் கண்டிப்பா வந்திடுவேன். அதுவரைக்கு டீச்சர் பக்கத்துல உட்கார்ந்திருக்கணும்’ என்று அடிக்கடி சொல்லி வையுங்கள். டீச்சரிடம் உங்கள் செல்போன் எண்ணை கொடுத்து வையுங்கள்.
7. குரூப் ஸ்டடி, நைட் நண்பர்கள் வீட்டில் தங்கப் போகிறேன் என்பதற்கெல்லாம் சம்மதிக்காதீர்கள். தேவை இருக்கும்பட்சத்தில் அவர்கள் வீட்டில் பெண்கள் இருந்தால் மட்டும் அனுப்புங்கள்.
8. வளர்ந்த பிள்ளைகள் ரோட்டில் நடந்து வரும்போது, யாராவது பின் தொடர்வதாக நினைத்தால்... அருகில் உள்ள நர்ஸிங் ஹோம், பெட்ரோல் பங்க், கூட்டமான பஸ் ஸ்டாப் என சென்று உட்கார்ந்துவிட வேண்டும். அங்கிருப்பவர்களிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி, பெற்றோருக்கு போன் போட்டு வரச்சொல்லலாம்!
9. கல்யாணம், சுபநிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு குழந்தையை அழைத்துப் போகும்போது அவர்கள் மீது ஒரு கண் வைத்து கொண்டே இருங்கள்.
10. உங்கள் வீட்டு வேலைக்காரர்கள் துவங்கி, தண்ணீர் கேன் போட வருகிறவர்கள் வரை அத்தனை பேரும் உங்கள் பிள்ளைகளிடம் எப்படி பழகுகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். சில வீட்டில், இவர்கள்தான் குழந்தைகளிடத்தில் தவறான வெஃப்சைட் உள்ளிட்ட தகவல்களையெல்லாம் பரிமாறுவது, தவறான புகைப்படங்களைக் காட்டுவது என்பது போன்ற வேலைகளை செய்கிறார்கள்... உஷார்!
11. குழந்தைகளைக் கொஞ்சு கிறவர்கள், மடியில் தூக்கி வைக்கிறவர்கள் மீது எல்லாம் ஒரு கண் வையுங்கள். அவர்கள் நடத்தையை தொடர்ந்து கண்காணியுங்கள். உங்கள் மனதுக்கு அவர்கள் சரியாகப் படவில்லையென்றால், அத் தகையோரிடம் குழந்தையைக் கொடுக்காதீர்கள். இல்லை என்றால், நீங்கள் அருகில் இருக்கும்போது மட்டும் கொடுங்கள்.
12. கிராமங்களில் இருக்கும் குழந்தைகள் விளையாடும்போது பாத்ரூம் போக தனியாக ஒதுங்குவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் கயவர்களிடம் சிக்குகிறார்கள். 'உனக்கு பாத்ரூம் வந்துச்சுனா, வீட்டுக்குத் தான் வரணும். பாத்ரூம் போய்ட்டு நீ எவ்வளவு நேரம் னாலும் விளையாடு... தப்பில்ல. கண்டிப்பா வீட்டை தவிர வேற எந்த இடத்திலேயும் பாத்ரூம் போகக் கூடாது' என்று சொல்லி வையுங்கள்.
2. 'அம்மா... மாமா என்னை கண்ட இடத்துல தொடறார்' என்று குழந்தை உங்களிடம் சொல்லும்பட்சத்தில், குடும்பத்தில் நம்பிக்கையானவரிடம் பேசி, இந்த விஷயத்தில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை யோசியுங்கள். இங்கே பிரச்னையே உறவுக்குள்ளிருந்துதான் என்பதால்... விஷயத்தை மிகக்கவனமாக கையாள வேண்டும்.
3. டியூஷன் அனுப்புகிறீர்களா... ஆசிரியர், அவருடைய இடம், சூழல் பற்றியெல்லாம் விசாரித்து வைத்துக் கொள்ளுங்கள் 'நீ மட்டும் இன்னிக்கு தனியா இருந்து படிச்சுட்டு போ' என்று சொன்னால் 'அம்மா திட்டுவாங்க சார்’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துவிடச் சொல்லுங்கள். தனியாக ஸ்பெஷல் கோச் என்பதெல்லாம் வேண்டவே வேண்டாம். தேவை எனும் பட்சத்தில், வீட்டுக்கு வரும் ஆசிரியராக பாருங்கள். 'டியூஷனைவிட எனக்கு நீ முக்கியம்' என்று உங்கள் வளர்ந்த பிள்ளைகளுக்குப் புரிய வையுங்கள்.
4. இது சம்மர் நேரம். பிள்ளைகளை தனியாக விளையாட விடாதீர்கள். பக்கத்து வீட்டில் அல்லது குழந்தைகளின் நண்பர்கள் வீட்டில் பெண்கள் இருந்தால் மட்டுமே அங்கு விளையாட அனுப்புங்கள். முடிந்தவரை உங்கள் வீட்டு முன்பாக கூட்டமாக விளையாடினால் மட்டுமே விளையாட அனுமதியுங்கள்.
5. ஸ்கூல் வேன் அல்லது பஸ்ஸில் உங்கள் குழந்தை பயணித்தால், கடைசி ஸ்டாப்பில் இறங்கும் வரை காத்திருக்காமல், அதற்கு முந்தின ஸ்டாப்பிங்கில் சென்று நின்று, அழைத்து வந்துவிடுங்கள். பெரிய குழந்தைகளாக இருந்தால்... சைக்கிளில் அனுப்புங்கள். நண்பர்களோடு கூட்டமாக வரச் சொல்லுங்கள்.
6. திடீரென பள்ளி விடுமுறை அறிவித்துவிட்டால், 'அம்மாவுக்கு டீச்சர் கால் பண்ணுவாங்க. நான் கண்டிப்பா வந்திடுவேன். அதுவரைக்கு டீச்சர் பக்கத்துல உட்கார்ந்திருக்கணும்’ என்று அடிக்கடி சொல்லி வையுங்கள். டீச்சரிடம் உங்கள் செல்போன் எண்ணை கொடுத்து வையுங்கள்.
7. குரூப் ஸ்டடி, நைட் நண்பர்கள் வீட்டில் தங்கப் போகிறேன் என்பதற்கெல்லாம் சம்மதிக்காதீர்கள். தேவை இருக்கும்பட்சத்தில் அவர்கள் வீட்டில் பெண்கள் இருந்தால் மட்டும் அனுப்புங்கள்.
8. வளர்ந்த பிள்ளைகள் ரோட்டில் நடந்து வரும்போது, யாராவது பின் தொடர்வதாக நினைத்தால்... அருகில் உள்ள நர்ஸிங் ஹோம், பெட்ரோல் பங்க், கூட்டமான பஸ் ஸ்டாப் என சென்று உட்கார்ந்துவிட வேண்டும். அங்கிருப்பவர்களிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி, பெற்றோருக்கு போன் போட்டு வரச்சொல்லலாம்!
9. கல்யாணம், சுபநிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு குழந்தையை அழைத்துப் போகும்போது அவர்கள் மீது ஒரு கண் வைத்து கொண்டே இருங்கள்.
10. உங்கள் வீட்டு வேலைக்காரர்கள் துவங்கி, தண்ணீர் கேன் போட வருகிறவர்கள் வரை அத்தனை பேரும் உங்கள் பிள்ளைகளிடம் எப்படி பழகுகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். சில வீட்டில், இவர்கள்தான் குழந்தைகளிடத்தில் தவறான வெஃப்சைட் உள்ளிட்ட தகவல்களையெல்லாம் பரிமாறுவது, தவறான புகைப்படங்களைக் காட்டுவது என்பது போன்ற வேலைகளை செய்கிறார்கள்... உஷார்!
11. குழந்தைகளைக் கொஞ்சு கிறவர்கள், மடியில் தூக்கி வைக்கிறவர்கள் மீது எல்லாம் ஒரு கண் வையுங்கள். அவர்கள் நடத்தையை தொடர்ந்து கண்காணியுங்கள். உங்கள் மனதுக்கு அவர்கள் சரியாகப் படவில்லையென்றால், அத் தகையோரிடம் குழந்தையைக் கொடுக்காதீர்கள். இல்லை என்றால், நீங்கள் அருகில் இருக்கும்போது மட்டும் கொடுங்கள்.
12. கிராமங்களில் இருக்கும் குழந்தைகள் விளையாடும்போது பாத்ரூம் போக தனியாக ஒதுங்குவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் கயவர்களிடம் சிக்குகிறார்கள். 'உனக்கு பாத்ரூம் வந்துச்சுனா, வீட்டுக்குத் தான் வரணும். பாத்ரூம் போய்ட்டு நீ எவ்வளவு நேரம் னாலும் விளையாடு... தப்பில்ல. கண்டிப்பா வீட்டை தவிர வேற எந்த இடத்திலேயும் பாத்ரூம் போகக் கூடாது' என்று சொல்லி வையுங்கள்.