1998-ம் ஆண்டு 150 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம் சுமார் 400 கிலோமீட்டர் மேலே ஆகாயத்தில் நிறுத்திவைக்கப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் உள்ள இயந்திரங்களை குளிர்விக்கும் குளிரூட்டும் பகுதிகளில் இருந்து அமோனியா வாயு கசிவு ஏற்படுவதை வியாழன்று வீரர்கள் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் விண்வெளி நிலையத்தில் முகாமிட்டுள்ள கிரிஸ் காசிடி மற்றும் டாம் மார்ஷ்பர்ன் என்ற இரு அமெரிக்க வீரர்கள் விண்வெளியில் கடந்து மிதந்தவாறு அந்த கசிவை சரி செய்தனர்.
இதனால் அங்கு தங்கியுள்ள விண்வெளி வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அடுத்த வாரம் டாம் மார்ஷ்பர்ன் மற்ற இரு விஞ்ஞானிகளுடன் பூமிக்கு திரும்ப உள்ளதால் இந்த கசிவை உடனடியாக சரிசெய்யப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விண்வெளி நிலையத்தில் முகாமிட்டுள்ள கிரிஸ் காசிடி மற்றும் டாம் மார்ஷ்பர்ன் என்ற இரு அமெரிக்க வீரர்கள் விண்வெளியில் கடந்து மிதந்தவாறு அந்த கசிவை சரி செய்தனர்.
இதனால் அங்கு தங்கியுள்ள விண்வெளி வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அடுத்த வாரம் டாம் மார்ஷ்பர்ன் மற்ற இரு விஞ்ஞானிகளுடன் பூமிக்கு திரும்ப உள்ளதால் இந்த கசிவை உடனடியாக சரிசெய்யப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.