KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.

Join the forum, it's quick and easy

KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.
KALAKALAPPU TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
KALAKALAPPU TAMIL CHAT

TAMIL CHAT ROOM WITH VOICE, VIDEO, KARAOKE & LYRICS | NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM FOR TAMIL COMMUNITY.

For Updates Via FACEBOOK Just Click ’LIKE" Button
KALAKALAPPU TAMIL CHAT
Latest topics
» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.
கம்பெனி செகரட்டரிஷிப்: கைநிறையச் சம்பளம், கண்ணியமான வேலை! EmptyTue May 27, 2014 2:37 pm by ctnsivani

» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.
கம்பெனி செகரட்டரிஷிப்: கைநிறையச் சம்பளம், கண்ணியமான வேலை! EmptyTue May 27, 2014 2:36 pm by ctnsivani

» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.
கம்பெனி செகரட்டரிஷிப்: கைநிறையச் சம்பளம், கண்ணியமான வேலை! EmptyTue May 27, 2014 2:35 pm by ctnsivani

» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு
கம்பெனி செகரட்டரிஷிப்: கைநிறையச் சம்பளம், கண்ணியமான வேலை! EmptyThu May 22, 2014 4:09 pm by ctnsivani

» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.
கம்பெனி செகரட்டரிஷிப்: கைநிறையச் சம்பளம், கண்ணியமான வேலை! EmptyThu May 22, 2014 4:04 pm by ctnsivani

» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே
கம்பெனி செகரட்டரிஷிப்: கைநிறையச் சம்பளம், கண்ணியமான வேலை! EmptyThu May 22, 2014 2:34 pm by ctnsivani

» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்
கம்பெனி செகரட்டரிஷிப்: கைநிறையச் சம்பளம், கண்ணியமான வேலை! EmptyThu May 22, 2014 2:32 pm by ctnsivani

» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி
கம்பெனி செகரட்டரிஷிப்: கைநிறையச் சம்பளம், கண்ணியமான வேலை! EmptyTue May 20, 2014 6:27 pm by ctnsivani

» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது
கம்பெனி செகரட்டரிஷிப்: கைநிறையச் சம்பளம், கண்ணியமான வேலை! EmptyTue May 20, 2014 6:25 pm by ctnsivani

» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்
கம்பெனி செகரட்டரிஷிப்: கைநிறையச் சம்பளம், கண்ணியமான வேலை! EmptyTue May 20, 2014 6:24 pm by ctnsivani

» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து
கம்பெனி செகரட்டரிஷிப்: கைநிறையச் சம்பளம், கண்ணியமான வேலை! EmptyTue May 20, 2014 6:23 pm by ctnsivani

» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி
கம்பெனி செகரட்டரிஷிப்: கைநிறையச் சம்பளம், கண்ணியமான வேலை! EmptyTue May 20, 2014 6:22 pm by ctnsivani

» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்
கம்பெனி செகரட்டரிஷிப்: கைநிறையச் சம்பளம், கண்ணியமான வேலை! EmptySat May 17, 2014 3:43 pm by ctnsivani

» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு
கம்பெனி செகரட்டரிஷிப்: கைநிறையச் சம்பளம், கண்ணியமான வேலை! EmptySat May 17, 2014 3:33 pm by ctnsivani

» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி
கம்பெனி செகரட்டரிஷிப்: கைநிறையச் சம்பளம், கண்ணியமான வேலை! EmptySat May 17, 2014 2:34 pm by ctnsivani

TOTAL VISITORS
Free Counter
Free Counter
Forum Live Users

You are not connected. Please login or register

கம்பெனி செகரட்டரிஷிப்: கைநிறையச் சம்பளம், கண்ணியமான வேலை!

Go down  Message [Page 1 of 1]

Geetha_Latha

Geetha_Latha
Admin

இன்றைக்கு கைநிறையச் சம்பளமும், கண்ணியமான வேலையும் பெறவேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது? அப்படி ஆசை இருக்கும் இளைஞர்கள் இப்போதே கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். கல்லூரிக்குச் சென்று படிக்க நேரம் இல்லாதவர்கள்

அஞ்சல் வழி மூலம் வீட்டில் இருந்தபடியே இந்தப் படிப்பை படிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்தப் படிப்பின் பல்வேறு அம்சங்களைப் பற்றி சொல்கிறார் ஐ.சி.எஸ்.ஐ.யின் இணை இயக்குநர் சாரா ஆரோக்கியசாமி.

''கம்பெனி செகரட்டரி படிப்பை தி இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செகரட்டரீஸ் ஆஃப் இந்தியா (ICSI) நடத்துகிறது. இதற்கு சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் புதுடெல்லி ஆகிய நான்கு நகரங்களில் மண்டல அலுவலகங்களும், 69 கிளை அலுவலகங்களும் இந்தியா முழுக்க இயங்கி வருகிறது. தென் இந்திய தலைமை மண்டல அலுவலகம் சென்னையில் செயல்படுகிறது.

இந்தப் படிப்பில் நான்கு நிலைகள் உள்ளன. ஆரம்ப நிலை, அதாவது பவுண்டேஷன் புரோகிராமில் 4 தாள்கள் இருக்கின்றன. இரண்டாம் நிலையான, நிர்வாக நிலையில் (Executive Programme) இரண்டு பிரிவுகள் உண்டு. இதில் ஆறு தாள்கள் உள்ளன. மூன்றாவது, தொழில்முறை நிலையில் (புரொபஷனல் புரோகிராம்) நான்கு பிரிவுகள் உண்டு. இதில் 8 தாள்கள் உள்ளன.

பிளஸ் டூவில் எந்த குரூப் படித்தவர்களும் இந்த அடிப்படைத் தேர்வு எழுதலாம். அடிப்படைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு முடித்தவர்கள் நிர்வாக நிலை தேர்வில் நேரடியாகச் சேரலாம். இதன் பின்பு புரொபஷனல் படிப்புக்குத் தேர்வு எழுதலாம். புரொபஷனல் தேர்வு முடித்தபின் 16 மாத மேலாண்மை பயிற்சிக்குச்

(Management Training) செல்லவேண்டும். இதற்குப் பின் இன்ஸ்டிடியூட்டில் பதிவு செய்தால் அசோசியேட் கம்பெனி செகரட்டரி கோர்ஸ் முடித்ததற்கான சான்றிதழ் கிடைக்கும். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இந்தத் தேர்வுகளை எழுத முடியும்.

இந்தப் படிப்பை படித்தால் வேலை கிடைப்பது சுலபம். காரணம், 5 கோடி ரூபாயும் அதற்கு மேலும் செலுத்தப்பட்ட மூலதனம் உள்ள கம்பெனிகள் கட்டாயம் ஒரு கம்பெனி செகரட்டரியை நியமிக்கவேண்டும் என்பது கம்பெனிகள் சட்ட விதி. அந்தப் பதவிக்கு இந்த கோர்ஸ் படித்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். 5 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள கம்பெனிகள் எக்ஸிக்யூட்டிவ் புரோகிராம் தேர்ச்சி பெற்ற மாணவர்களை உதவி கம்பெனி செகரட்டரியாகப் பணியில் அமர்த்தலாம். தவிர, பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ள அனைத்து கம்பெனிகளும் கம்பெனி செகரட்டரியை நியமனம் செய்ய வேண்டும்.

கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பை படித்து முடித்தவர்கள் நிர்வாக இயக்குநரா கவும், முழுநேர இயக்குநராகவும், கம்பெனி யின் தலைவராகவும் உயர் பதவியில் இருக்கிறார்கள். கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பை முடித்தவர்கள் கம்பெனியில் முழுநேர அதிகாரியாகப் பணிபுரியலாம் அல்லது தனியாகவும் வேலை பார்க்கலாம்.

ஒரு கம்பெனி செகரட்டரி என்பவர் கம்பெனி ஆரம்பித்தல், கம்பெனிகள் பல்வேறு துறைகளில் சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்தல், கம்பெனி தொடர்பாக நீதிமன்றங்களில் ஆஜராகுதல், பல்வேறு துறை சார்ந்த சட்டப் பணிகள் உள்பட பல வேலைகளைச் செய்வார்.

இந்தப் படிப்பில் ஆண்டு முழுவதும் எந்த நாளிலும் சேரலாம். தபால் வழிக் கல்வி தான் என்பதால் வீட்டில் இருந்தபடியே படிக்கலாம். மண்டல அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் நடக்கும் நேர்முக வகுப்பிலும் சேர்ந்து படிக்கலாம். ஓர் ஆண்டுக்கு ஜூன் மற்றும் டிசம்பர் என இரண்டுமுறை தேர்வு நடக்கும். மார்ச் 31-க்குள் சேருபவர்கள் டிசம்பர் மாதம் தேர்வு எழுதலாம். செப்டம்பர் 30-க்குள் சேருபவர்கள் அடுத்த ஆண்டு ஜூனில் நடைபெறும் அடிப்படைத் தேர்வு எழுதலாம். இந்தப் படிப்பில் சேருவதற்கு வயது வரம்பு இல்லை என்பது கூடுதல் சிறப்பு'' என்று முடித்தார் சாரா ஆரோக்கியசாமி.

கைநிறையச் சம்பளம், நிறுவனங்களைக் கட்டிக்காக்கும் கண்ணியமான வேலையைத் தரும் கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பை நீங்களும் படிக்கலாமே!

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum