புரட்சி வீரன் பகத்சிங்கைத் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் நேரம் நெருங்கியது. அதிகாரி வந்தார். அவரிடம் பகத்சிங், 'கொஞ்சம் நில்லுங்கள். நான் லெனினுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்’ என்றான். அதிகாரியோ நடுங்கிப்போனார். தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய பகத்சிங் அஞ்சவில்லை. அப்போது, லெனின் எழுதிய, 'அரசும் புரட்சியும்’ என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தான்.
நல்ல புத்தகங்கள் நம்மை வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்கின்றன.
ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்குத் துணையாக சென்னையில் தொடங்கியிருக்கிறது இன்னொரு புத்தக விழா. தமிழ்நாடு தமிழ் நூல் வெளியீட்டுக் கழகம் மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்தும் புத்தகக் காட்சி இது.
கடந்த 15-ம் தேதி திங்கட்கிழமை காலை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்த இந்தப் புத்தக விழா, சென்னை கடற்கரைக்கு எதிரே விவேகானந்தர் இல்லம் அருகில் உள்ள லேடி வெல்லிங்டன் பள்ளி வளாகத்தில் 28-ம் தேதி வரை நடக்கிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 120 கடைகளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விற்பனையாளர்களும் பதிப்பகங்களும் நேரடியாக இங்கு ஸ்டால் அமைத்து புத்தகங்களை விற்பனை செய்யலாம். இதுதவிர, அரிய புத்தகங்களை வெளியிட முடியாமல் இருக்கும் எழுத்தாளர்களுக்கு, அரசிடம் இருந்தும் புரவலர்களிடம் இருந்தும் நிதியுதவி பெற ஆவன செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகக் கண்காட்சி நடக்கும் வளாகத்தில் தினமும் மாலையில் பட்டிமன்றம், கருத்தரங்கம், வினாடி வினா என பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
இதுபற்றி, தமிழ்நாடு தமிழ் நூல் வெளியீட்டுக் கழகம் மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் கழகம் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சண்முகம், ''கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையில் மாற்றுவதற்காக இந்தப் புத்தகக் காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் அரிய பல தமிழ் இலக்கிய நூல்கள், நவீன படைப்பிலக்கியங்கள், அறிவியல் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தகக் காட்சி நிறைவு நாளில் சிறந்த எழுத்தாளர்களுக்கும் பதிப்பகத்தாருக்கும் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன'' என்றார்.
சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் இன்னுமொரு புத்தகச் சங்கமம், 18-ம் தேதி தொடங்கியிருக்கிறது. இந்தக் கண்காட்சி 27-ம் தேதி வரை நடக்கிறது. புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவதே இளம் தலைமுறையை சரியான வழி நடத்துவதாக அமையும்.
நல்ல புத்தகங்கள் நம்மை வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்கின்றன.
ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்குத் துணையாக சென்னையில் தொடங்கியிருக்கிறது இன்னொரு புத்தக விழா. தமிழ்நாடு தமிழ் நூல் வெளியீட்டுக் கழகம் மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்தும் புத்தகக் காட்சி இது.
கடந்த 15-ம் தேதி திங்கட்கிழமை காலை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்த இந்தப் புத்தக விழா, சென்னை கடற்கரைக்கு எதிரே விவேகானந்தர் இல்லம் அருகில் உள்ள லேடி வெல்லிங்டன் பள்ளி வளாகத்தில் 28-ம் தேதி வரை நடக்கிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 120 கடைகளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விற்பனையாளர்களும் பதிப்பகங்களும் நேரடியாக இங்கு ஸ்டால் அமைத்து புத்தகங்களை விற்பனை செய்யலாம். இதுதவிர, அரிய புத்தகங்களை வெளியிட முடியாமல் இருக்கும் எழுத்தாளர்களுக்கு, அரசிடம் இருந்தும் புரவலர்களிடம் இருந்தும் நிதியுதவி பெற ஆவன செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகக் கண்காட்சி நடக்கும் வளாகத்தில் தினமும் மாலையில் பட்டிமன்றம், கருத்தரங்கம், வினாடி வினா என பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
இதுபற்றி, தமிழ்நாடு தமிழ் நூல் வெளியீட்டுக் கழகம் மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் கழகம் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சண்முகம், ''கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையில் மாற்றுவதற்காக இந்தப் புத்தகக் காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் அரிய பல தமிழ் இலக்கிய நூல்கள், நவீன படைப்பிலக்கியங்கள், அறிவியல் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தகக் காட்சி நிறைவு நாளில் சிறந்த எழுத்தாளர்களுக்கும் பதிப்பகத்தாருக்கும் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன'' என்றார்.
சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் இன்னுமொரு புத்தகச் சங்கமம், 18-ம் தேதி தொடங்கியிருக்கிறது. இந்தக் கண்காட்சி 27-ம் தேதி வரை நடக்கிறது. புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவதே இளம் தலைமுறையை சரியான வழி நடத்துவதாக அமையும்.