தஞ்சாவூர்: காவிரி மேற்பார்வை குழு அமைக்க வேண்டுமென உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கக்கூடியது என்றும் கர்நாடகத்திற்கு சாதகமானது என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி தலைவருமான பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விகடன். காம்-க்கு அவர் அளித்த பேட்டியில், "உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோதர், குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு வழங்கியுள்ள உத்தரவு, காவிரி பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக, வளர்க்கும் வகையில் உள்ளது. 2013, மே 10ஆம் தேதி நடந்த விசாரணையின் போது கர்நாடக வழக்கறிஞர் பாலி நாரிமன், தன்னுடைய ஆலோசனை அடங்கிய குறிப்பு தாள் ஒன்றை நீதிபதிகளிடம் வழங்கினார். அதில் இருந்த ஆலோசனையை பாராட்டி, அப்படியே ஏற்றுக்கொண்டு, காவிரி மேற்பார்வைக் குழு அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
1998ஆம் ஆண்டு முதல் 18.2.2013 வரை காவிரி கண்காணிப்பு குழு என்ற பெயரில் ஒரு அமைப்பு செயல்பட்டது. அந்த குழுவானது, கர்நாடகாவிடமிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட தமிழகத்திற்கு பெற்று தரவில்லை. கர்நாடகாவை ஒருமுறை கூட கண்டித்ததும் இல்லை. அந்த குழுவில் இடம் பெற்றிருந்தது போலவே, இந்த குழுவிலும் இந்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் தலைவராகவும், தமிழகம், கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.
இக்குழுவால் தமிழகத்திற்கு எந்த பலனும் ஏற்படாது. உடனடியாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால்தான், காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும். தமிழகத்திற்கு உரிய நீரை உடனே பெற முடியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தமிழக முதல்வர், இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து, பிரதமருக்கு அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் காவிரி உரிமை எழுச்சி பேரணி நடத்த வேண்டும். காவிரி வழக்கிற்காக, தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் குழுவில், ஆக்கப்பூர்வமான சில மாற்றங்களை தமிழக முதல்வர் மேற்கொள்ள வேண்டும். கர்நாடக வழக்கறிஞர் பாலி நாரிமனுக்கு இணையான திறமையும் செல்வாக்கும் படைத்த வழக்கறிஞர்களை, தமிழக அரசு நியமிக்க வேண்டும்" என மணியரசன் கூறினார்.
இது தொடர்பாக அவர் விகடன். காம்-க்கு அவர் அளித்த பேட்டியில், "உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோதர், குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு வழங்கியுள்ள உத்தரவு, காவிரி பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக, வளர்க்கும் வகையில் உள்ளது. 2013, மே 10ஆம் தேதி நடந்த விசாரணையின் போது கர்நாடக வழக்கறிஞர் பாலி நாரிமன், தன்னுடைய ஆலோசனை அடங்கிய குறிப்பு தாள் ஒன்றை நீதிபதிகளிடம் வழங்கினார். அதில் இருந்த ஆலோசனையை பாராட்டி, அப்படியே ஏற்றுக்கொண்டு, காவிரி மேற்பார்வைக் குழு அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
1998ஆம் ஆண்டு முதல் 18.2.2013 வரை காவிரி கண்காணிப்பு குழு என்ற பெயரில் ஒரு அமைப்பு செயல்பட்டது. அந்த குழுவானது, கர்நாடகாவிடமிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட தமிழகத்திற்கு பெற்று தரவில்லை. கர்நாடகாவை ஒருமுறை கூட கண்டித்ததும் இல்லை. அந்த குழுவில் இடம் பெற்றிருந்தது போலவே, இந்த குழுவிலும் இந்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் தலைவராகவும், தமிழகம், கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.
இக்குழுவால் தமிழகத்திற்கு எந்த பலனும் ஏற்படாது. உடனடியாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால்தான், காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும். தமிழகத்திற்கு உரிய நீரை உடனே பெற முடியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தமிழக முதல்வர், இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து, பிரதமருக்கு அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் காவிரி உரிமை எழுச்சி பேரணி நடத்த வேண்டும். காவிரி வழக்கிற்காக, தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் குழுவில், ஆக்கப்பூர்வமான சில மாற்றங்களை தமிழக முதல்வர் மேற்கொள்ள வேண்டும். கர்நாடக வழக்கறிஞர் பாலி நாரிமனுக்கு இணையான திறமையும் செல்வாக்கும் படைத்த வழக்கறிஞர்களை, தமிழக அரசு நியமிக்க வேண்டும்" என மணியரசன் கூறினார்.