சென்னை: பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் சுவாச கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழம்பெரும் சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் கடந்த வாரம் மந்தைவெளியில் அவரது வீட்டில் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த சவுந்தராஜன், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற டி.எம்.சவுந்தரராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு நேற்று திடீரென்று சுவாச கோளாறு ஏற்பட்டது. உடனடியாக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள டி.எம்.சவுந்தரராஜனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பழம்பெரும் சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் கடந்த வாரம் மந்தைவெளியில் அவரது வீட்டில் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த சவுந்தராஜன், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற டி.எம்.சவுந்தரராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு நேற்று திடீரென்று சுவாச கோளாறு ஏற்பட்டது. உடனடியாக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள டி.எம்.சவுந்தரராஜனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.