KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.

Join the forum, it's quick and easy

KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.
KALAKALAPPU TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
KALAKALAPPU TAMIL CHAT

TAMIL CHAT ROOM WITH VOICE, VIDEO, KARAOKE & LYRICS | NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM FOR TAMIL COMMUNITY.

For Updates Via FACEBOOK Just Click ’LIKE" Button
KALAKALAPPU TAMIL CHAT
Latest topics
» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.
RAHUL GANDHI EmptyTue May 27, 2014 2:37 pm by ctnsivani

» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.
RAHUL GANDHI EmptyTue May 27, 2014 2:36 pm by ctnsivani

» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.
RAHUL GANDHI EmptyTue May 27, 2014 2:35 pm by ctnsivani

» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு
RAHUL GANDHI EmptyThu May 22, 2014 4:09 pm by ctnsivani

» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.
RAHUL GANDHI EmptyThu May 22, 2014 4:04 pm by ctnsivani

» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே
RAHUL GANDHI EmptyThu May 22, 2014 2:34 pm by ctnsivani

» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்
RAHUL GANDHI EmptyThu May 22, 2014 2:32 pm by ctnsivani

» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி
RAHUL GANDHI EmptyTue May 20, 2014 6:27 pm by ctnsivani

» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது
RAHUL GANDHI EmptyTue May 20, 2014 6:25 pm by ctnsivani

» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்
RAHUL GANDHI EmptyTue May 20, 2014 6:24 pm by ctnsivani

» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து
RAHUL GANDHI EmptyTue May 20, 2014 6:23 pm by ctnsivani

» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி
RAHUL GANDHI EmptyTue May 20, 2014 6:22 pm by ctnsivani

» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்
RAHUL GANDHI EmptySat May 17, 2014 3:43 pm by ctnsivani

» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு
RAHUL GANDHI EmptySat May 17, 2014 3:33 pm by ctnsivani

» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி
RAHUL GANDHI EmptySat May 17, 2014 2:34 pm by ctnsivani

TOTAL VISITORS
Free Counter
Free Counter
Forum Live Users

You are not connected. Please login or register

RAHUL GANDHI

Go down  Message [Page 1 of 1]

1RAHUL GANDHI Empty RAHUL GANDHI Sat May 11, 2013 7:06 pm

Geetha_Latha

Geetha_Latha
Admin

''அம்மா நான் பாஸாயிட்டேன்'' என்ற ராகுல் காந்தியின் உற்சாகக் குரல், கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளிவர ஆரம்பித்த சில மணித் துளிகளில் ஜன்பத் சாலை வீட்டில் இருந்த சோனியாவின் செவிகளில் நிச்சயம் ஒலித்திருக்கும்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கர்நாடகத்தில் தன் கோட்டையை காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியதை​விட‌, தன்னுடைய ஆசை மைந்தன் ராகுல் காந்தி எதிர்கொண்ட தேர்தல்களில் முதல் முறையாக வெற்றி பெற்ற மகிழ்ச்சிதான் சோனியாவுக்குக் கூடுதலாக இருக்கும்.
224 தொகுதிகள் அடங்கியது கர்நாடக சட்ட​மன்றம். பிரியபட்னா தொகுதியின் பி.ஜே.பி. வேட்பாளர் திடீரென இறந்துவிட்டதால், 223 தொகுதிகளுக்கு மே 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தல் நடைபெற்று இருப்பதால், ஒட்டுமொத்த இந்தியாவே தேர்தல் முடிவு வெளியாகும் மே 8-ம் தேதிக்குக் காத்திருந்தது.

காங்கிரஸ், பி.ஜே.பி., மதச்சார்பற்ற ஜனதா தளம், கர்நாடக ஜனதா கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் மல்லுக்கட்டிய தேர்தலில் 121 தொகுதி​களைப் கைப்பற்றி, தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ். ஆளும் கட்சியான பி.ஜே.பி-யும் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தலா 40 இடங்களில் வெற்றி பெற்றன. புதிதாகக் கட்சி ஆரம்பித்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி ஆறு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ரெட்டி சகோதரர்களின் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் நான்கு இடங்களைப் பிடித்தது.
ஜெயித்தது ராகுல் காந்தியா?
'மே 5-ம் தேதி கர்நாடகத்தில் தேர்தல் என அறிவித்த வேகத்திலே சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டதோடு வேட்பாளர் தேர்விலும் அதிக அக்கறை காட்டினார் காங்கிரஸின் துணைப் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி. உத்தரப்பிரதேசத் தேர்தலில் கோட்டைவிட்டதை கர்நாடகத்தில் அறுவடை செய்ய வேண்டும் என்ற முடிவோடு, சந்து பொந்து எல்லாம் சென்று வாக்குகளை சேகரித்தார். தலித் வீட்டில் தண்ணீர் குடிப்பது, பழங்குடியினர் வீட்டில் படுத்துத் தூங்குவது போன்றவை ராகுலுக்கு நன்றாகவே 'கை’ கொடுத்திருக்கிறது. இது ஒரு காரணம் என்றால், சொந்தச் செலவிலேயே சூன்யம் வைத்துக்கொண்ட பி.ஜே.பி-யின் செயல்பாடுகள் இன்னொரு காரணம். தென்னிந்தியாவில் முதல் முறையாக கர்நாடகத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய பி.ஜே.பி. எங்கெங்கும் ஊழல், எப்போதும் லஞ்சம், மூன்று முறை முதல்வர் மாற்றம், 17 முறை அமைச்சரவை மாற்றம் என மிக மோசமான நிர்வாகம் நடத்தியதால், அதிருப்தி அலை காங்கிரஸுக்கு சாதகமாக அமைந்தது. பி.ஜே.பி. புண்ணியவான்களோடு ஒப்பிடுகையில் காங்கிரஸே தேவலாம் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதனால் இதை ராகுல் காந்தியின் தனிப்பட்ட வெற்றியாகக் கருத முடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
'மோடி’யின் மந்திரம் பலிக்காதது ஏன்?’
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி-​யின் பிரதமர் வேட்பாளராகச் சொல்லப்படும் நரேந்திர மோடி, கர்நாடகத் தேர்தலை ஒரு முன்னோட்டமாகப் பயன்படுத்த நினைத்தார். ஆனால், அவரது 'மோடி’ வேலை கர்நாடகத்தில் பலிக்கவில்லை. பெரும் எதிர்பார்ப்பில் இருந்த மோடிக்கு, கர்நாடகத் தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கும். ஏனென்றால், ராகுல் காந்தி வாக்கு சேகரித்த இடங்களில் எல்லாம் மோடியும் மூன்று கட்டங்களாக வாக்கு சேகரித்தார். கர்நாடகத்தில் மீண்டும் பி.ஜே.பி-யை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என்ற கனவிலேயே மோடி முழுஅக்கறை காட்டினார். ஆனால், கர்நாடகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகால பி.ஜே.பி. ஆட்சி, 50 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும் மோசமாக இருந்ததை மக்கள் மறக்கவில்லை. வட கர்நாடக பி.ஜே.பி.யில் பெரும் செல்வாக்குடன் வலம் வந்த ரெட்டி சகோதரர்கள், தனிக் கட்சி ஆரம்பித்து ஓட்டுகளைப் பிரித்ததால் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. பி.ஜே.பி. ஆட்சியில் பல்வேறு காலகட்டங்களில் சுழற்சி முறையில் அமைச்சர்களாக இருந்த 17 பேர் தேர்தலில் மண்ணைக் கவ்வியது மாபெரும் அதிர்ச்சி.
சபதத்தை நிறைவேற்றிய எடியூரப்பா
''நான் ஆட்சியைக் கைப்பற்றா​விட்டாலும் பி.ஜே.பி-யைத் தோற்​கடிக்காமல் விட மாட்டேன். குறிப்பாக, எனக்கு இடைஞ்சலாக இருக்கும் துணை முதல்வர் ஈஸ்​வரப்பாவை ஜெயிக்கவே விட மாட்டேன்'' என சபதம் போட்டார் எடியூரப்பா. கூறியபடியே பி.ஜே.பி-யையும் ஈஸ்வரப்​பாவை​யும் தோற்கடித்துவிட்டார். எடியூ​ரப்பா திட்டமிட்டே போட்டி வேட்பாளர்களை நிறுத்தி, அனைத்து இடங்களிலும் பி.ஜே.பி-யின் வாக்குகளைப் பிரித்தார். 2008 தேர்தலில் 110 இடங்களைக் கைப்பற்றிய பி.ஜே.பி., இந்தத் தேர்தலில் 40 இடங்கள் மட்டுமே பெற்றதற்கு எடியூரப்பாதான் காரணம் என பி.ஜே.பி. தலைவர்களே சொல்கிறார்கள். ஆனால், எடியூரப்பா பெரிதும் எதிர்பார்த்த லிங்காயத்து சமுதாயத்தினரின் வாக்குகளும் தமிழர்களின் வாக்குகளும் அவருக்கு விழவே இல்லை.
எல்லாத் தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த அ.தி.மு.க.
அ.தி.மு.க. ஐந்து இடங்களில் போட்டியிட்டது. தமிழகத்தில் இருந்து அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் நடிகர்களும் தீவிரமாகப் பிரசாரத்தில் ஈடுபட்டபோதிலும் அத்தனை இடங்களிலும் டெபாசிட்டை இழந்திருக்கிறது. எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க., கர்நாடக சட்டமன்றத் தேர்​தலில் பல இடங்களில் வென்று தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தது. அதேபோல 1994-ம் ஆண்டும் ஓர் இடத்தைப் பிடித்தது. ''ஜெயலலிதாவும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்காகப் பிரசாரத்தில் ஈடுபட்​டிருந்தால், குறைந்தது மூன்று இடங்களாவது கிடைத்​திருக்கும். தேசிய அரசியலில் அக்கறை காட்டும் ஜெயலலிதா, கர்நாடகத்தில் இருக்கும் தமிழ் வாக்காளர்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்'' என்கிறார்கள் கர்நாடகப் பத்திரிகையாளர்கள்.
முதல்வர் யார்?
'முதல்வர் யார்?’ என அறிவிக்காமலேயே தேர்​தலைச் சந்தித்து 121 இடங்களைப் பிடித்து தனி மெஜாரிட்​டியுடன் ஆட்சி அமைக்கப்போகிற‌து காங்கிரஸ். ஆரம்பம் முதலே 'முதல்வர் பதவி எனக்குத்தான்’ என உள்ளடி வேலை பார்த்து வந்தது சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் சித்தராமைய்யாவும் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரமேஷ்வரும்தான். துரதிஷ்ட​வசமாக‌ பரமேஷ்வர் தோல்வியைத் தழுவினார். இவரது தோல்விக்கு உள்ளடி வேலைகளைப் பார்த்தது சித்தராமைய்யாதான் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த நிலையில் 'முதல்வர் பதவியை எனக்குத்தான் தர வேண்டும்’ என டி.சிவக்குமார், எஸ்.எம்.கிருஷ்ணா, ஜாபர் ஷெரிஃப், மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமைய்யா உள்ளிட்டோர் டெல்லிக்குப் படையெடுத்துள்ளனர். சித்தராமைய்யா அல்லது மல்லிகார்ஜுன கார்கே ஆகிய இருவரில் ஒருவரைத்தான் காங்கிரஸ் மேலிடம் முதல்வராக நியமிக்கும். சித்தராமைய்யா ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் வேறொரு கட்சியில் இருந்து காங்கிரஸுக்கு வந்தார். அவருக்கு முதல்வர் பதவி வழங்கினால், கட்சியில் காலங்காலமாக இருக்கும் காங்கிரஸ்காரர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். அதனால், மூத்த தலைவரும் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பதவிக்கான வெளிச்சம் அதிகமாக இருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் யார்?
இந்த நிலையில் பி.ஜே.பி-யும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் சமமாக தலா 40 இடங்களைக் கைப்பற்றி இருப்பதால், 'யார் எதிர்க்கட்சித் தலைவர்’ என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தோ அல்லது சுயேச்சைகளின் ஆதரவோடோ எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்ற பி.ஜே.பி. கணக்குப் போடுகிறது.
மொத்தத்தில் கர்நாடகாவில் கரன்சி தேர்தல் முடிந்துவிட்டது.

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum