தேவையானவை: கத்திரிக்காய் - 100 கிராம், முருங்கைக்காய் - ஒன்று, கொத்தவரங்காய், சேனைக்கிழங்கு - தலா 50 கிராம், புளிக் கரைசல் - 100 கிராம், பச்சரிசி மாவு - 2 டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 50 கிராம், மஞ்சள்தூள் - சிறிதளவு, குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகள் அனைத்தையும், தோல் நீக்கி சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரிக்கவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள், உரித்த சின்ன வெங்காயம் சேர்த்து... பச்சரிசி மாவு தவிர்த்து அனைத்து பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் விட்டு வேகவிடவும். கலவை நன்றாக கொதித்து, காய்கறிகள் பாதி அளவு வெந்தபின், பச்சரிசி மாவை சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை கொதித்து குழம்பு பதத்துக்கு வரும்போது உப்பு சரிபார்த்து இறக்கவும்.
இதை வெள்ளை சாதம், இடியாப்பம் இவற்றோடு சேர்த்துச் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
செய்முறை: காய்கறிகள் அனைத்தையும், தோல் நீக்கி சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரிக்கவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள், உரித்த சின்ன வெங்காயம் சேர்த்து... பச்சரிசி மாவு தவிர்த்து அனைத்து பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் விட்டு வேகவிடவும். கலவை நன்றாக கொதித்து, காய்கறிகள் பாதி அளவு வெந்தபின், பச்சரிசி மாவை சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை கொதித்து குழம்பு பதத்துக்கு வரும்போது உப்பு சரிபார்த்து இறக்கவும்.
இதை வெள்ளை சாதம், இடியாப்பம் இவற்றோடு சேர்த்துச் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.