தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்காயம் ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தயிர் - 3 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
அரைக்க: தக்காளி - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 10 பல், பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று, புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 2.
செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்து, கெட்டியாக வடிகட்டி, சாறு எடுக்கவும். அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி... அரைத்து வடிகட்டி எடுத்த சாற்றை ஊற்றி, நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் இதனுடன் மஞ்சள்தூள், உப்பு, தயிர் சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்னர் அரிசியை சேர்த்துக் கிளறி, வெந்ததும் இறக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், காய்கறி சேர்த்துக் கொள்ளலாம்.
அரைக்க: தக்காளி - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 10 பல், பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று, புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 2.
செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்து, கெட்டியாக வடிகட்டி, சாறு எடுக்கவும். அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி... அரைத்து வடிகட்டி எடுத்த சாற்றை ஊற்றி, நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் இதனுடன் மஞ்சள்தூள், உப்பு, தயிர் சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்னர் அரிசியை சேர்த்துக் கிளறி, வெந்ததும் இறக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், காய்கறி சேர்த்துக் கொள்ளலாம்.