தூதுவளை - 100 கிராம்
வரமிளகாய் - 3 அல்லது 4
பூண்டு - 4 பல்
உளுந்து - ஒரு தேக்கரண்டி
புளி - சிறிதளவு (ஒரு புளியங் கோட்டை அளவு )
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தூதுவளையை நன்றாக அலசி தண்ணீர் இல்லாமல் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும் .
மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வரமிளகாய் போடவும், பின்பு உளுந்து சேர்த்து வறுக்கவும் .பின் பூண்டு சேர்த்து வதக்கவும் .பின் தண்ணீர் வடித்து வைத்துள்ள கீரையை போட்டு வதக்கவும்.
கீரை நன்கு வதங்கும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
நன்றாக வதங்கி வந்ததும் மிக்ஸியில் போட்டு,புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
எல்லா வித சாப்பாட்டிற்கும் பொருத்தமாக இருக்கும். மிக
சுலபமாக செய்யக்கூடிய துவையல் இது. மருத்துவ குணங்கள் உடையது.