சூரியன் மேற்கே உதிக்கிறது’ என்று சொன்னால்கூட நம் மக்கள் நம்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தங்கம் விலை இறங்கிவிட்டது என்பதை இன்னும் நம்ப முடியாமல் இருக்கிறார்கள். கடந்த சில தினங்களில் ஒரு சவரனுக்கு (22 கேரட்) சுமார் 2,800 ரூபாய் குறைந்திருக்கிறது. முன்பு 8 கிராம் தங்கத்தை வாங்க வைத்திருந்த தொகையில், இப்போது 9 கிராம் தங்கத்தை வாங்க முடியும். ஸ்டார் ஹோட்டல் லாபி முதல் செருப்பு தைக்கும் கடை வரை தங்கம் விலை குறைந்ததுதான் ஹாட் டாபிக்.
முகூர்த்த சீசன், அட்சய திருதியை போன்றவைதான் தங்கம் விலை உயர்வதற்குக் காரணம் என்று நினைக்கிறோம். ஆனால், தங்கம் விலை ஏறுவதற்கும் இறங்குவதற்கும் உலக அளவில் பல காரணங்கள் இருக்கின்றன. இப்போது, தங்கம் விலை இறங்கியதற்கு என்ன காரணம்? நிதி ஆலோசகர் நாகப்பனிடம் பேசினோம். ''ஐரோப்பிய நாடான சைப்ரஸ், சமீபத்தில் நிதி நெருக்கடியில் சிக்கியது. அந்த நாட்டில் இருக்கும் தங்கத்தை விற்று சமாளிக்கலாம் என்று அந்த நாட்டு நிதிஅமைச்சகம் முடிவு செய்தது. இத்தனைக்கும் அந்த நாட்டில் சுமார் 16.5 டன் தங்கம்தான் இருக்கிறது. இதில் 14 டன் அளவுக்குத்தான் விற்க முடிவெடுத்திருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகச்சிறிய அளவுதான். இருந்தாலும், தங்கம் விலை இறங்குகிறது. இதற்குக் காரணம், ஒருவேளை சைப்ரஸ் விற்க ஆரம்பித்தால், நிதி நெருக்கடியில் இருக்கும் போர்ச்சுகல், இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய நாடுகளும் விற்க வாய்ப்பு இருக்கிறது. அதனால், விலை குறைந்துவருகிறது.
இதுநாள் வரை அமெரிக்கா நிதி நெருக்கடியில் தவித்தது. அங்கு குறைந்த வட்டிக்குப் பணம் கிடைத்தது. அதனால், அந்தப் பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்துவந்தனர். இப்போது அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டு வருவதற்கு சாத்தியங்கள் தெரிவதால், தங்கத்தை விற்றுவருகிறார்கள்.
மேலே சொன்ன இரண்டு விஷயங்களும் இன்னும் நடக்கவில்லை. அதாவது, சைப்ரஸ் இன்னும் தங்கத்தை விற்கவில்லை. அமெரிக்காவும் பெரிய வளர்ச்சியை அடையவில்லை. அதற்கான சாத்தியங்கள் தெரிய ஆரம்பித்த உடனே உலகம் முழுக்க இருக்கும் வர்த்தகர்கள் தங்கத்தை அதிக அளவு விற்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால், தங்கத்தின் விலை குறைந்துவருகிறது.
இந்தச் சூழ்நிலையில் தங்கம் விலை பெரிய அளவுக்கு உயர வாய்ப்பு இல்லை. எப்போதெல்லாம் உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறதோ, அப்போது தங்கம் விலை உயரும். வளர்ச்சி இருக்கும்போது தங்கத்தின் விலையில் ஏற்றம் இருக்காது. இப்போதைக்கு உலகின் முக்கிய நாடான அமெரிக்கா வளர்ச்சிக்கான சூழ்நிலையில் இருப்பதால், பணத்தை அச்சடிப்பது குறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால், டாலர் பலம் அடைந்து தங்கம் விலை சரியவும் வாய்ப்பு இருக்கிறது.
தங்கம் விலை குறைந்திருப்பதால் ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகள் தங்கம் வாங்கப்போவதாகச் சொல்லியிருக்கிறது. ஒருவேளை விலை குறைவாக இருக்கிறது என்று சீனா (சீனாவிடம் அதிக டாலர்கள் இருக்கின்றன) தங்கத்தை வாங்க ஆரம்பித்தால், தங்கம் விலை சிறிதளவு உயரலாமே தவிர, நடுத்தர காலத்தில் பெரிய விலையேற்றம் தங்கத்தில் இருப்பதுபோல தெரியவில்லை'' என்றார்.
இந்தச் சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கம் வாங்கலாமா? பென்ச்மார்க் அட்வைஸரி சர்வீசஸின் இயக்குனர் சண்முகநாதன் நாகசுந்தரத்திடம் பேசினோம். ''இப்போதைக்கு தங்கம் விலை குறைந்துகொண்டே வருகிறது. இதை வாங்குவதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்க வேண்டும். இதற்கு கீழே குறையும் என்று காத்திருக்க வேண்டாம். இதற்கு கீழேயும்கூட குறைலாம்; அதிகரிக்கவும் செய்யலாம். குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் எந்தவிதமான கணிப்பையும் சொல்ல முடியாது. ஆனால், இன்னும் மூன்று வருடங்களுக்குள் ஒரு கிராம் 5,000 ரூபாய் வரைகூட அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது ஒரு சவரன் விலை 40 ஆயிரம் ரூபாயைக்கூட எட்டலாம்.
உலகின் அனைத்து நாட்டு கரன்சிக்களுக்கும் மாற்றுத் தங்கம்தான். ஆனால், தங்கம் குறைவாக இருக்கிறது. மாறாக கரன்சிகளை அச்சடித்துக்கொண்டே இருக்கிறோம். அதனால், தங்கம் விலை குறைந்தாலும் நீண்ட காலத்துக்கு, உயரத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்'' என்றார்.
என்ன, தங்கம் வாங்கக் கிளம்பிட்டீங்களா?
முகூர்த்த சீசன், அட்சய திருதியை போன்றவைதான் தங்கம் விலை உயர்வதற்குக் காரணம் என்று நினைக்கிறோம். ஆனால், தங்கம் விலை ஏறுவதற்கும் இறங்குவதற்கும் உலக அளவில் பல காரணங்கள் இருக்கின்றன. இப்போது, தங்கம் விலை இறங்கியதற்கு என்ன காரணம்? நிதி ஆலோசகர் நாகப்பனிடம் பேசினோம். ''ஐரோப்பிய நாடான சைப்ரஸ், சமீபத்தில் நிதி நெருக்கடியில் சிக்கியது. அந்த நாட்டில் இருக்கும் தங்கத்தை விற்று சமாளிக்கலாம் என்று அந்த நாட்டு நிதிஅமைச்சகம் முடிவு செய்தது. இத்தனைக்கும் அந்த நாட்டில் சுமார் 16.5 டன் தங்கம்தான் இருக்கிறது. இதில் 14 டன் அளவுக்குத்தான் விற்க முடிவெடுத்திருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகச்சிறிய அளவுதான். இருந்தாலும், தங்கம் விலை இறங்குகிறது. இதற்குக் காரணம், ஒருவேளை சைப்ரஸ் விற்க ஆரம்பித்தால், நிதி நெருக்கடியில் இருக்கும் போர்ச்சுகல், இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய நாடுகளும் விற்க வாய்ப்பு இருக்கிறது. அதனால், விலை குறைந்துவருகிறது.
இதுநாள் வரை அமெரிக்கா நிதி நெருக்கடியில் தவித்தது. அங்கு குறைந்த வட்டிக்குப் பணம் கிடைத்தது. அதனால், அந்தப் பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்துவந்தனர். இப்போது அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டு வருவதற்கு சாத்தியங்கள் தெரிவதால், தங்கத்தை விற்றுவருகிறார்கள்.
மேலே சொன்ன இரண்டு விஷயங்களும் இன்னும் நடக்கவில்லை. அதாவது, சைப்ரஸ் இன்னும் தங்கத்தை விற்கவில்லை. அமெரிக்காவும் பெரிய வளர்ச்சியை அடையவில்லை. அதற்கான சாத்தியங்கள் தெரிய ஆரம்பித்த உடனே உலகம் முழுக்க இருக்கும் வர்த்தகர்கள் தங்கத்தை அதிக அளவு விற்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால், தங்கத்தின் விலை குறைந்துவருகிறது.
இந்தச் சூழ்நிலையில் தங்கம் விலை பெரிய அளவுக்கு உயர வாய்ப்பு இல்லை. எப்போதெல்லாம் உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறதோ, அப்போது தங்கம் விலை உயரும். வளர்ச்சி இருக்கும்போது தங்கத்தின் விலையில் ஏற்றம் இருக்காது. இப்போதைக்கு உலகின் முக்கிய நாடான அமெரிக்கா வளர்ச்சிக்கான சூழ்நிலையில் இருப்பதால், பணத்தை அச்சடிப்பது குறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால், டாலர் பலம் அடைந்து தங்கம் விலை சரியவும் வாய்ப்பு இருக்கிறது.
தங்கம் விலை குறைந்திருப்பதால் ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகள் தங்கம் வாங்கப்போவதாகச் சொல்லியிருக்கிறது. ஒருவேளை விலை குறைவாக இருக்கிறது என்று சீனா (சீனாவிடம் அதிக டாலர்கள் இருக்கின்றன) தங்கத்தை வாங்க ஆரம்பித்தால், தங்கம் விலை சிறிதளவு உயரலாமே தவிர, நடுத்தர காலத்தில் பெரிய விலையேற்றம் தங்கத்தில் இருப்பதுபோல தெரியவில்லை'' என்றார்.
இந்தச் சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கம் வாங்கலாமா? பென்ச்மார்க் அட்வைஸரி சர்வீசஸின் இயக்குனர் சண்முகநாதன் நாகசுந்தரத்திடம் பேசினோம். ''இப்போதைக்கு தங்கம் விலை குறைந்துகொண்டே வருகிறது. இதை வாங்குவதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்க வேண்டும். இதற்கு கீழே குறையும் என்று காத்திருக்க வேண்டாம். இதற்கு கீழேயும்கூட குறைலாம்; அதிகரிக்கவும் செய்யலாம். குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் எந்தவிதமான கணிப்பையும் சொல்ல முடியாது. ஆனால், இன்னும் மூன்று வருடங்களுக்குள் ஒரு கிராம் 5,000 ரூபாய் வரைகூட அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது ஒரு சவரன் விலை 40 ஆயிரம் ரூபாயைக்கூட எட்டலாம்.
உலகின் அனைத்து நாட்டு கரன்சிக்களுக்கும் மாற்றுத் தங்கம்தான். ஆனால், தங்கம் குறைவாக இருக்கிறது. மாறாக கரன்சிகளை அச்சடித்துக்கொண்டே இருக்கிறோம். அதனால், தங்கம் விலை குறைந்தாலும் நீண்ட காலத்துக்கு, உயரத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்'' என்றார்.
என்ன, தங்கம் வாங்கக் கிளம்பிட்டீங்களா?