தேவையானவை: கெட்டி அவல் - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், நறுக்கிய பூசணிக்காய் - அரை கப், கேரட் - ஒன்று, குடமிளகாய் (நறுக்கியது), பச்சைப் பட்டாணி, சௌசௌ - தலா அரை கப், வெங்காயம் - ஒன்று, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தனியா - 2 டீஸ்பூன், மிளகு - கால் டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை களைந்து 10 நிமிடம் வைக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து பொடி செய்யவும். பாசிபருப்பை மஞ்சள்தூள், காய்களுடன் வேக வைக்கவும் (குடமிளகாய், வெங்காயம் தவிர). அதனுடன் புளிக் கரைசல், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். அரைத்து வைத்த பொடியை சேர்த்து... வெங்காயம், குடமிளகாயை வதக்கி போட்டு, அவலை பிழிந்து சேர்க்கவும். எல்லாம் சேர்ந்தாற்போல் வந்தததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.
செய்முறை: அவலை களைந்து 10 நிமிடம் வைக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து பொடி செய்யவும். பாசிபருப்பை மஞ்சள்தூள், காய்களுடன் வேக வைக்கவும் (குடமிளகாய், வெங்காயம் தவிர). அதனுடன் புளிக் கரைசல், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். அரைத்து வைத்த பொடியை சேர்த்து... வெங்காயம், குடமிளகாயை வதக்கி போட்டு, அவலை பிழிந்து சேர்க்கவும். எல்லாம் சேர்ந்தாற்போல் வந்தததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.