தமது நண்பனும், புக்கியுமான ஜிஜூ ஜனார்தன் ஆசைக்காட்டியதால்தான், தாம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் கண்ணீர்விட்டு கதறியபடியே ஒப்புக்கொண்டுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சந்திலா மற்றும் இடைத்தரகர்கள் என 14 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்
நீதிமன்றத்தில் ஆஜர்
இந்நிலையில் கைதான ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களும் டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த், தான் ஒரு அப்பாவி என்றும், தன்னை இந்த ஊழலில் சிக்க வைத்துவிட்டனர் என்றும் புலம்பினார். இதனிடையே போலீசார் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். ஆனால் 5 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீசாந்தின் வழக்கறிஞர் தீபக் பிரகாஷ்,"டெல்லி மெட்ரோ பாலிட்டன் நீதிபதியிடம் ஸ்ரீசாந்த் தான் ஒரு அப்பாவி என்றும், தன்னை சிக்க வைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீசாந்துக்கு எதிராக போலீசார் நேரடி ஆதாரம் எதுவும் தாக்கல் செய்ய வில்லை. அவர் ஒரு அப்பாவி. இந்த வழக்கில் அவரை சிக்க வைத்துவிட்டனர். இந்த சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் எடுக்க முயற்சி செய்து வருகிறேன்" என்றார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட ஸ்ரீசாந்த்
இதனிடையே ஸ்ரீசாந்திடம் நேற்று டெல்லி போலீசார் மேற்கொண்ட விசாரணையின்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டதாகவும், தனது நண்பரும், புக்கியுமான ஜிஜூ ஜனார்தன் ஆசைக்காட்டி தம்மை இதில் இழுத்துவிட்டுவிட்டதாக கண்ணீர்விட்டு அழுது புலம்பியதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேப்போன்று சூதாட்ட புகாரில் சிக்கி கைதான மற்றொரு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான அங்கீத் சவாணும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, "நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்" எனக் கூறியபடியே கண்ணீர்விட்டு அழுததாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இதனிடையே இவர்கள் இருவரை தவிர, கைதான மற்றொரு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரான அஜித் சந்திலா, ஒரு இடைத்தரகர் மற்றும் 10 புக்கிகளிடமும் இன்று விசாரணை நடைபெற்றதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சந்திலா மற்றும் இடைத்தரகர்கள் என 14 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்
நீதிமன்றத்தில் ஆஜர்
இந்நிலையில் கைதான ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களும் டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த், தான் ஒரு அப்பாவி என்றும், தன்னை இந்த ஊழலில் சிக்க வைத்துவிட்டனர் என்றும் புலம்பினார். இதனிடையே போலீசார் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். ஆனால் 5 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீசாந்தின் வழக்கறிஞர் தீபக் பிரகாஷ்,"டெல்லி மெட்ரோ பாலிட்டன் நீதிபதியிடம் ஸ்ரீசாந்த் தான் ஒரு அப்பாவி என்றும், தன்னை சிக்க வைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீசாந்துக்கு எதிராக போலீசார் நேரடி ஆதாரம் எதுவும் தாக்கல் செய்ய வில்லை. அவர் ஒரு அப்பாவி. இந்த வழக்கில் அவரை சிக்க வைத்துவிட்டனர். இந்த சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் எடுக்க முயற்சி செய்து வருகிறேன்" என்றார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட ஸ்ரீசாந்த்
இதனிடையே ஸ்ரீசாந்திடம் நேற்று டெல்லி போலீசார் மேற்கொண்ட விசாரணையின்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டதாகவும், தனது நண்பரும், புக்கியுமான ஜிஜூ ஜனார்தன் ஆசைக்காட்டி தம்மை இதில் இழுத்துவிட்டுவிட்டதாக கண்ணீர்விட்டு அழுது புலம்பியதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேப்போன்று சூதாட்ட புகாரில் சிக்கி கைதான மற்றொரு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான அங்கீத் சவாணும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, "நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்" எனக் கூறியபடியே கண்ணீர்விட்டு அழுததாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இதனிடையே இவர்கள் இருவரை தவிர, கைதான மற்றொரு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரான அஜித் சந்திலா, ஒரு இடைத்தரகர் மற்றும் 10 புக்கிகளிடமும் இன்று விசாரணை நடைபெற்றதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.