சென்னை: மூச்சு திணறல் காரணமாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றுரவு 11 மணியளவில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ராமதாசுடன் அவரது மனைவி சரஸ்வதியம்மாள் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் உடனிருக்கின்றனர்.
ராமதாஸ் தற்போது நலமாக இருப்பதால் தொண்டர்கள் கலக்கம் கொள்ளத் தேவையில்லை எனவும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவமனைக்கு வருவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, மரக்காணம் பகுதிக்கு செல்ல, ராமதாஸ், அன்புமணி மற்றும் பா.ம.க.வினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றுரவு 11 மணியளவில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ராமதாசுடன் அவரது மனைவி சரஸ்வதியம்மாள் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் உடனிருக்கின்றனர்.
ராமதாஸ் தற்போது நலமாக இருப்பதால் தொண்டர்கள் கலக்கம் கொள்ளத் தேவையில்லை எனவும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவமனைக்கு வருவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, மரக்காணம் பகுதிக்கு செல்ல, ராமதாஸ், அன்புமணி மற்றும் பா.ம.க.வினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.