நிதி நிறுவன மோசடியில் தொடங்கி ஈமு கோழி விவகாரம் வரை கொங்கு மண்டலத்தில் விதவிதமாக மோசடிகளுக்கு பஞ்சம் இல்லை. அந்த வரிசையில், இதோ... புதிதாக மருத்துவ மோசடியும் சேர்ந்திருக்கிறது.
கடந்த வாரம், கோவை கலெக்டர் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட 11 பெண்கள் சொன்ன குற்றச்சாட்டு, பதறவைக்கும் ரகம். எதில்தான் மோசடி செய்வது என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்ட காலமாக இது இருக்கிறது. 'பொள்ளாச்சியைச் சேர்ந்த மருத்துவமனை ஒன்று டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை கருவூட்டல் செய்வதாகக் கூறி, எங்களிடம் 30 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துவிட்டனர்’ என்று சொல்லிப் பதறவைக்கிறார்கள் அந்தப் பெண்கள்.
நடந்தது என்ன? புகார் அளித்தவர்களில் ஒருவரான பொள்ளாச்சியைச் சேர்ந்த சாந்தி, அது தொடர்பாக விளக்கினார். ''எங்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், குழந்தை இல்லை. அதன் காரணமாகவே, குடும்பத்திலும் சமூகத்திலும் நாங்கள் அடைந்த துன்பங்கள் அதிகம். ஏதோ குறையுள்ளவர்களாகவே பார்க்கப்பட்டோம். பொள்ளாச்சியில் 'மிஸஸ் டெஸ்ட் டியூப் பேபி சென்டர்’ பற்றிக் கேள்விப்பட்டோம். அரசு மருத்துவரான ராஜா மற்றும் அவரது மனைவி சுமதி இருவரும் இணைந்து இந்த மருத்துவமனையைத் தொடங்கினர். ஊர் முழுக்க விளம்பரம் செய்தும் பல இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தியும் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை கருவூட்டல் செய்வதாக அவர்கள் பிரசாரம் செய்தனர். அதை நம்பி பலர் அந்த மருத்துவமனையில் சேர்ந்தோம்.
நாங்கள் 11 பேரும் ஜனவரி 28-ம் தேதி மருத்துவமனையில் அட்மிட் ஆனோம். ஒவ்வொருவரும் இரண்டரை லட்சம் ரூபாயை சில தவணைகளில் கட்டினோம். ஏழை, நடுத்தர மக்களாகியாக நாங்கள் நகைகள், தொழில் நடத்திய லேத் ஆலை ஆகியவற்றை விற்றுதான் பணத்தையே கட்டினோம். அதன் பின்னர்தான் அங்கு எந்த வசதிகளுமே இல்லாத சோதனைக்கூடங்களைக் காட்டி, எங்களை ஏமாற்றியது தெரியவந்தது. சிகிச்சையிலும் மோசடிதான்.
பிப்ரவரி 14-ம் தேதி வரை எங்களை சோதித்தவர்கள், கரு உருவாகியிருப்பதாகக் கூறி, மருத்துவமனையில் இருந்து எங்களை அனுப்பிவிட்டனர். மீண்டும் 25 மற்றும் 28-ம் தேதிகளில் சோதனைக்கு அழைத்தனர். அப்போதுதான் நெகட்டிவ் என ரிசல்ட் கொடுத்தனர். பிப்ரவரி 14-ம் தேதியே இந்த முடிவு அவர்களுக்குத் தெரிந்திருந்தபோதும், எங்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கி நாட்களைக் கடத்தினர். இதன் பின்னர் டிஸ்சார்ஜ் சம்மரி கேட்டோம். இதுவரை டிஸ்சார்ஜ் சம்மரி வழங்கவில்லை. திட்டமிட்டே எங்களை ஏமாற்றிவிட்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 70 சதவிகிதம் வரை கருவுற வாய்ப்பு எனக் கூறினர். ஆனால், 11 பேரில் ஒருவருக்குக்கூட கரு உருவாகவில்லை. வசதி இல்லாத சோதனைக்கூடங்களை வைத்துக்கொண்டு, இல்லாத தொழில்நுட்ப இயந்திரங்கள் இருப்பதாகக் கூறி எங்களை ஏமாற்றிவிட்டனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்'' என்று குமுறினார்.
இன்னொரு புகார்தாரர் நாகமணி, ''மற்ற 10 பேருக்கும் சோதனைக்குப் பின்னர் கருவுறவில்லை எனக் கூறிவிட்டனர். ஆனால், நான் மட்டும் கருவுற்றிருப்பதாகக் கூறினர். அதை நம்பி மார்ச் 15-ம் தேதி வரை மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தேன். ஒரே மாதிரியான மருந்து, மாத்திரைகளை வழங்கிவந்ததால், எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. வேறு மருத்துவமனையில் சோதித்தேன். கரு ஏதும் உருவாகவில்லை என்றனர். ஸ்கேன் மூலமும் அதை உறுதிப்படுத்தினர். அதே நாளில் இந்த மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து பார்த்தோம். ஆனால் இங்கோ, கரு உருவாகியுள்ளதாக கூறினர். வெளியே எடுக்கப்பட்ட ஸ்கேன் முடிவைக் காட்டிக் கேட்டபோது, சரியான பதில் இல்லை. இது மிகப் பெரிய மோசடி'' என்று கொதித்தார்.
இந்தப் புகார் தொடர்பாக 'மிஸஸ் டெஸ்ட் டியூப் பேபி சென்டர்’ நிர்வாகி டாக்டர் ராஜாவிடம் பேசினோம். ''இந்தச் சிகிச்சையில் 30 சதவிகிதம்தான் வெற்றி வாய்ப்பு இருக்கும். இதையெல்லாம் சொல்லி, எழுத்துப்பூர்வமாக சம்மதம் வாங்கித்தான் சிகிச்சை செய்தோம். இவர்களில் பலர், வேறு இடங்களில் சிகிச்சை செய்து கொண்டவர்கள். இதுவும்கூட இந்தத் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம். இந்தப் புகார்கள் எல்லாம் தவறானவை. நாங்கள் எங்கள் சிகிச்சையை முறையாகத்தான் செய்தோம். 20 வருடங்கள் அனுபவம் உள்ள மருத்துவர்கள்தான் சிகிச்சை செய்கின்றனர். நாகமணி என்பவருக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருந்தது. அது குழந்தை உருவம் இல்லை என்றுதான் ரிசல்ட் கொடுத்தோம். எங்கள் பெயரைக் கெடுக்கவும் பணத்துக்காகவும் இந்தப் புகாரைக் கூறிவருகிறார்கள். எந்த வசதியும் இல்லாமல் டெஸ்ட் டியூப் பேபி சென்டரைத் தொடங்க முடியாது. எங்கள் வளர்ச்சி பிடிக்காமல் வேறு சில மருத்துவர்கள், மருத்துவமனைகள் தூண்டுதலில் இது நடந்திருக்கும் என சந்தேகிக்கிறோம்'' என்றார்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட புகார் மனு, போலீஸ் விசாரணையில் உள்ளது. கோவை மாவட்ட காவல் துறை, மருத்துவக் குழுவிடம் விளக்க அறிக்கை கேட்டுள்ளது. அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர் காவல் துறை அதிகாரிகள்.
உயிரை வைத்து ஏமாற்றுவது தொடங்கிவிட்டது. உஷார்!
- ச.ஜெ.ரவி
படங்கள்: த.சித்தார்த்
''அதிகப்படியான உத்தரவாதங்களே பிரச்னைக்குக் காரணம்!''
செயற்கை கருவூட்டல் முறை தொடர்பாக பொள்ளாச்சி மருத்துவமனை மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் இளங்கோவனிடம் பேசினோம்.
''டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பேறு காண்பது என்பது, உடலுக்கு வெளியே பெண் உயிரின் கரு முட்டை, ஆணின் விந்துடன் இணைந்து கருக்கட்டல் நிகழும் செயல்முறை. கருமுட்டையுடன் விந்தை இணைத்து செயற்கையாக உருவாக்கப்படும் கருக்களை, ஒரு பெண்ணின் கருப்பையில் தக்க முறையில் வைப்பதன் மூலம், அந்தக் கரு வளர்ந்து அந்தப் பெண் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உருவாகலாம். பொதுவாக குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் இருந்தும், இயற்கையாக சில சிக்கல்களைக்கொண்டிருக்கும் பெற்றோருக்கு இந்த முறை உதவும். இந்தச் சோதனை முறையில், வெற்றி விகிதம் என்பது குறைவுதான். 20 சதவிகிதம்தான் வெற்றி வாய்ப்பு. உயிரித் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் விளைவால், இந்தக் கருத்தரிப்பு விகிதம் அண்மைய ஆண்டுகளில் கூடி வருகிறது.
இந்த சிகிச்சை முறை தோல்வியடைய பல காரணங்கள் உள்ளன. பெண்ணின் வயது, இந்தச் சோதனை முறை கருக்கட்டலின் வெற்றி தோல்வி வாய்ப்புகளுக்கான முக்கியமான காரணியாக உள்ளது. 23 வயது முதல் 29 வரையிலான வயதுதான் இந்தச் சிகிச்சைக்கு உகந்ததாக அறியப்படுகிறது.
மிஸஸ் டெஸ்ட் டியூப் பேபி சென்டர் விவகாரத்தைப் பொறுத்தவரையில், அளவுக்கு அதிகமாக மருத்துவமனை தரப்பில் உத்தரவாதங்கள் வழங்கப்பட்டதுதான் பிரச்னைக்குக் காரணம். பொதுவாக டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பேறு அடைவதில் சாத்தியம் மிகக் குறைவுதான். ஆனால், 70 சதவிகிதம் வரை வாய்ப்பு என இந்த மருத்துவமனை ஏமாற்றியதாகப் புகார் கூறப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளுடன் இயங்குவதாக மருத்துவமனை நிர்வாகம் உரிய அனுமதி பெற்றுள்ளது. அதனை மறு ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளோம். விசாரணைக்குப் பின்னரே முழு விவரம் தெரியப்படுத்தப்படும்.
சோதனை முறையில் கருவூட்டல் செய்வதில் மிகக் குறைந்த அளவே சாத்தியம் உள்ளது என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்று மருத்துவமனைகள் அளிக்கும் தவறான உத்தரவாதங்களை நம்பக் கூடாது'' என்றார்.
அண்மை காலங்களில் இதேபோன்று சில டெஸ்ட் டியூப் பேபி சென்டர்கள் மீது மக்கள் புகார் கூறியுள்ள நிலையில், இதில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.
கடந்த வாரம், கோவை கலெக்டர் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட 11 பெண்கள் சொன்ன குற்றச்சாட்டு, பதறவைக்கும் ரகம். எதில்தான் மோசடி செய்வது என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்ட காலமாக இது இருக்கிறது. 'பொள்ளாச்சியைச் சேர்ந்த மருத்துவமனை ஒன்று டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை கருவூட்டல் செய்வதாகக் கூறி, எங்களிடம் 30 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துவிட்டனர்’ என்று சொல்லிப் பதறவைக்கிறார்கள் அந்தப் பெண்கள்.
நடந்தது என்ன? புகார் அளித்தவர்களில் ஒருவரான பொள்ளாச்சியைச் சேர்ந்த சாந்தி, அது தொடர்பாக விளக்கினார். ''எங்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், குழந்தை இல்லை. அதன் காரணமாகவே, குடும்பத்திலும் சமூகத்திலும் நாங்கள் அடைந்த துன்பங்கள் அதிகம். ஏதோ குறையுள்ளவர்களாகவே பார்க்கப்பட்டோம். பொள்ளாச்சியில் 'மிஸஸ் டெஸ்ட் டியூப் பேபி சென்டர்’ பற்றிக் கேள்விப்பட்டோம். அரசு மருத்துவரான ராஜா மற்றும் அவரது மனைவி சுமதி இருவரும் இணைந்து இந்த மருத்துவமனையைத் தொடங்கினர். ஊர் முழுக்க விளம்பரம் செய்தும் பல இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தியும் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை கருவூட்டல் செய்வதாக அவர்கள் பிரசாரம் செய்தனர். அதை நம்பி பலர் அந்த மருத்துவமனையில் சேர்ந்தோம்.
நாங்கள் 11 பேரும் ஜனவரி 28-ம் தேதி மருத்துவமனையில் அட்மிட் ஆனோம். ஒவ்வொருவரும் இரண்டரை லட்சம் ரூபாயை சில தவணைகளில் கட்டினோம். ஏழை, நடுத்தர மக்களாகியாக நாங்கள் நகைகள், தொழில் நடத்திய லேத் ஆலை ஆகியவற்றை விற்றுதான் பணத்தையே கட்டினோம். அதன் பின்னர்தான் அங்கு எந்த வசதிகளுமே இல்லாத சோதனைக்கூடங்களைக் காட்டி, எங்களை ஏமாற்றியது தெரியவந்தது. சிகிச்சையிலும் மோசடிதான்.
பிப்ரவரி 14-ம் தேதி வரை எங்களை சோதித்தவர்கள், கரு உருவாகியிருப்பதாகக் கூறி, மருத்துவமனையில் இருந்து எங்களை அனுப்பிவிட்டனர். மீண்டும் 25 மற்றும் 28-ம் தேதிகளில் சோதனைக்கு அழைத்தனர். அப்போதுதான் நெகட்டிவ் என ரிசல்ட் கொடுத்தனர். பிப்ரவரி 14-ம் தேதியே இந்த முடிவு அவர்களுக்குத் தெரிந்திருந்தபோதும், எங்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கி நாட்களைக் கடத்தினர். இதன் பின்னர் டிஸ்சார்ஜ் சம்மரி கேட்டோம். இதுவரை டிஸ்சார்ஜ் சம்மரி வழங்கவில்லை. திட்டமிட்டே எங்களை ஏமாற்றிவிட்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 70 சதவிகிதம் வரை கருவுற வாய்ப்பு எனக் கூறினர். ஆனால், 11 பேரில் ஒருவருக்குக்கூட கரு உருவாகவில்லை. வசதி இல்லாத சோதனைக்கூடங்களை வைத்துக்கொண்டு, இல்லாத தொழில்நுட்ப இயந்திரங்கள் இருப்பதாகக் கூறி எங்களை ஏமாற்றிவிட்டனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்'' என்று குமுறினார்.
இன்னொரு புகார்தாரர் நாகமணி, ''மற்ற 10 பேருக்கும் சோதனைக்குப் பின்னர் கருவுறவில்லை எனக் கூறிவிட்டனர். ஆனால், நான் மட்டும் கருவுற்றிருப்பதாகக் கூறினர். அதை நம்பி மார்ச் 15-ம் தேதி வரை மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தேன். ஒரே மாதிரியான மருந்து, மாத்திரைகளை வழங்கிவந்ததால், எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. வேறு மருத்துவமனையில் சோதித்தேன். கரு ஏதும் உருவாகவில்லை என்றனர். ஸ்கேன் மூலமும் அதை உறுதிப்படுத்தினர். அதே நாளில் இந்த மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து பார்த்தோம். ஆனால் இங்கோ, கரு உருவாகியுள்ளதாக கூறினர். வெளியே எடுக்கப்பட்ட ஸ்கேன் முடிவைக் காட்டிக் கேட்டபோது, சரியான பதில் இல்லை. இது மிகப் பெரிய மோசடி'' என்று கொதித்தார்.
இந்தப் புகார் தொடர்பாக 'மிஸஸ் டெஸ்ட் டியூப் பேபி சென்டர்’ நிர்வாகி டாக்டர் ராஜாவிடம் பேசினோம். ''இந்தச் சிகிச்சையில் 30 சதவிகிதம்தான் வெற்றி வாய்ப்பு இருக்கும். இதையெல்லாம் சொல்லி, எழுத்துப்பூர்வமாக சம்மதம் வாங்கித்தான் சிகிச்சை செய்தோம். இவர்களில் பலர், வேறு இடங்களில் சிகிச்சை செய்து கொண்டவர்கள். இதுவும்கூட இந்தத் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம். இந்தப் புகார்கள் எல்லாம் தவறானவை. நாங்கள் எங்கள் சிகிச்சையை முறையாகத்தான் செய்தோம். 20 வருடங்கள் அனுபவம் உள்ள மருத்துவர்கள்தான் சிகிச்சை செய்கின்றனர். நாகமணி என்பவருக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருந்தது. அது குழந்தை உருவம் இல்லை என்றுதான் ரிசல்ட் கொடுத்தோம். எங்கள் பெயரைக் கெடுக்கவும் பணத்துக்காகவும் இந்தப் புகாரைக் கூறிவருகிறார்கள். எந்த வசதியும் இல்லாமல் டெஸ்ட் டியூப் பேபி சென்டரைத் தொடங்க முடியாது. எங்கள் வளர்ச்சி பிடிக்காமல் வேறு சில மருத்துவர்கள், மருத்துவமனைகள் தூண்டுதலில் இது நடந்திருக்கும் என சந்தேகிக்கிறோம்'' என்றார்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட புகார் மனு, போலீஸ் விசாரணையில் உள்ளது. கோவை மாவட்ட காவல் துறை, மருத்துவக் குழுவிடம் விளக்க அறிக்கை கேட்டுள்ளது. அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர் காவல் துறை அதிகாரிகள்.
உயிரை வைத்து ஏமாற்றுவது தொடங்கிவிட்டது. உஷார்!
- ச.ஜெ.ரவி
படங்கள்: த.சித்தார்த்
''அதிகப்படியான உத்தரவாதங்களே பிரச்னைக்குக் காரணம்!''
செயற்கை கருவூட்டல் முறை தொடர்பாக பொள்ளாச்சி மருத்துவமனை மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் இளங்கோவனிடம் பேசினோம்.
''டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பேறு காண்பது என்பது, உடலுக்கு வெளியே பெண் உயிரின் கரு முட்டை, ஆணின் விந்துடன் இணைந்து கருக்கட்டல் நிகழும் செயல்முறை. கருமுட்டையுடன் விந்தை இணைத்து செயற்கையாக உருவாக்கப்படும் கருக்களை, ஒரு பெண்ணின் கருப்பையில் தக்க முறையில் வைப்பதன் மூலம், அந்தக் கரு வளர்ந்து அந்தப் பெண் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உருவாகலாம். பொதுவாக குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் இருந்தும், இயற்கையாக சில சிக்கல்களைக்கொண்டிருக்கும் பெற்றோருக்கு இந்த முறை உதவும். இந்தச் சோதனை முறையில், வெற்றி விகிதம் என்பது குறைவுதான். 20 சதவிகிதம்தான் வெற்றி வாய்ப்பு. உயிரித் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் விளைவால், இந்தக் கருத்தரிப்பு விகிதம் அண்மைய ஆண்டுகளில் கூடி வருகிறது.
இந்த சிகிச்சை முறை தோல்வியடைய பல காரணங்கள் உள்ளன. பெண்ணின் வயது, இந்தச் சோதனை முறை கருக்கட்டலின் வெற்றி தோல்வி வாய்ப்புகளுக்கான முக்கியமான காரணியாக உள்ளது. 23 வயது முதல் 29 வரையிலான வயதுதான் இந்தச் சிகிச்சைக்கு உகந்ததாக அறியப்படுகிறது.
மிஸஸ் டெஸ்ட் டியூப் பேபி சென்டர் விவகாரத்தைப் பொறுத்தவரையில், அளவுக்கு அதிகமாக மருத்துவமனை தரப்பில் உத்தரவாதங்கள் வழங்கப்பட்டதுதான் பிரச்னைக்குக் காரணம். பொதுவாக டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பேறு அடைவதில் சாத்தியம் மிகக் குறைவுதான். ஆனால், 70 சதவிகிதம் வரை வாய்ப்பு என இந்த மருத்துவமனை ஏமாற்றியதாகப் புகார் கூறப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளுடன் இயங்குவதாக மருத்துவமனை நிர்வாகம் உரிய அனுமதி பெற்றுள்ளது. அதனை மறு ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளோம். விசாரணைக்குப் பின்னரே முழு விவரம் தெரியப்படுத்தப்படும்.
சோதனை முறையில் கருவூட்டல் செய்வதில் மிகக் குறைந்த அளவே சாத்தியம் உள்ளது என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்று மருத்துவமனைகள் அளிக்கும் தவறான உத்தரவாதங்களை நம்பக் கூடாது'' என்றார்.
அண்மை காலங்களில் இதேபோன்று சில டெஸ்ட் டியூப் பேபி சென்டர்கள் மீது மக்கள் புகார் கூறியுள்ள நிலையில், இதில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.