தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா 2, உருளைக்கிழங்கு, கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 6, பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 4, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி - 6, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 6 பல், தனியா, கசகசா - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம் - தலா ஒன்று, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெண்ணெய், நெய் - தலா அரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். அவற்றை தனித்தனியாக, மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், முந்திரி, இஞ்சி, பூண்டு, தனியா, கசகசா, சீரகம் ஆகியவற்றை கொஞ்சம் நீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். பட்டை, லவங்கத்தை நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
குக்கரில் நெய், வெண்ணெய் சேர்த்து உருக்கி... பட்டை - லவங்கப் பொடியை சேர்த்து, நறுக்கிய காய்கறிகளையும். உப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் அரைத்த வெங்காயம், அரைத்த தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு அரைத்த பச்சை மிளகாய் மசாலா விழுதையும் சேர்த்து வதக்கி, ஒன்றரை கப் நீர் சேர்த்து, கொதி வந்ததும், கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடவும். நன்கு ஸ்டீம் வந்ததும் 'வெயிட்’ போட்டு, அடுப்பை 'சிம்’மில் வைத்து 10 நிமிடத்துக்குப் பிறகு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். இந்த பிரியாணியின் வாசனை ஆளைத் தூக்கும்.
செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். அவற்றை தனித்தனியாக, மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், முந்திரி, இஞ்சி, பூண்டு, தனியா, கசகசா, சீரகம் ஆகியவற்றை கொஞ்சம் நீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். பட்டை, லவங்கத்தை நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
குக்கரில் நெய், வெண்ணெய் சேர்த்து உருக்கி... பட்டை - லவங்கப் பொடியை சேர்த்து, நறுக்கிய காய்கறிகளையும். உப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் அரைத்த வெங்காயம், அரைத்த தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு அரைத்த பச்சை மிளகாய் மசாலா விழுதையும் சேர்த்து வதக்கி, ஒன்றரை கப் நீர் சேர்த்து, கொதி வந்ததும், கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடவும். நன்கு ஸ்டீம் வந்ததும் 'வெயிட்’ போட்டு, அடுப்பை 'சிம்’மில் வைத்து 10 நிமிடத்துக்குப் பிறகு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். இந்த பிரியாணியின் வாசனை ஆளைத் தூக்கும்.