விஸ்வரூபம் படம் சந்திக்கும் பல சிக்கல்களுக்கும் காரணமே, கோடம்பாக்கத்தின் 'புதிய சக்ஸேனா- ஐயப்பன்' என்று வர்ணிக்கப்படும் இருவர்தானாம். இதில் ஒருவர் ஒரு முக்கியமான டிவி நிர்வாகி என்றும், மற்றொருவர் ஹீல்ஸ் செருப்பால் தாக்கப்பட்டதாக புகார் கூறிய ஆடிட்டர் என்றும் சொல்கிறார்கள். டிடிஎச் விவகாரத்தில் கமலை முழுக்க முழுக்க தவறாக வழிநடத்தியதே இந்த இருவர்தான் என்கிறார்கள். குறிப்பாக இந்த ஆடிட்டர், ஏதாவது ஒரு வழியில் பணம் வந்தால் போதும் என்று நினைத்து டிடிஎச் முதலில், தியேட்டர்களில் பிறகு என முதலில் யோசனை கூறி, பின்னர் கமலை பின்வாங்க வைத்தாராம். கைமாறிய சேட்டிலைட் உரிமை... இன்னொரு பக்கம், அரசின் பார்வை விஸ்வரூபத்தின் மீது இத்தனை கடுமையாக இருக்கக் காரணம், இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமை வேறு சேனலுக்கு கைமாறியதுதான் என்கிறார்கள். ஆரம்பத்தில் பெரும் விலைக்கு ஜெயா டிவி வாங்கியிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இப்போது அதை விஜய் டிவிக்கு கைமாற்றியுள்ளார் கமல். இதெல்லாம் நிஜமா.. அல்லது வெறும் அனுமானங்களா... என்பதையெல்லாம் காலம்தான் சொல்ல வேண்டும்!
Join the forum, it's quick and easy