பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சார குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், தன்னை நியமித்த தலைவர்களுக்கு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இன்று கோவாவில் நடந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் மோடி 2014 தேர்தல் பிரச்சார குழு தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இதையடுத்து தன்னை தேர்ந்தெடுத்த தலைவர்களுக்கு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ''எனக்கு பிரச்சார குழு தலைவர் பொறுப்பு கொடுத்து ஆசி வழங்கிய அனைத்து தலைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றுவேன் என உறுதி எடுத்துக் கொள்கிறேன். மேலும் காங்கிரஸ் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்கவும் நான் சபதம் எடுத்துக்கொள்கிறேன்'' என்றார்.
மேலும் அவர், ''என்னுடன் மூத்த தலைவர் அத்வானி தொலைபேசியில் பேசினார். அப்போது என்னை பிரச்சார குழு தலைவராக நியமனம் செய்ததற்கு வாழ்த்து தெரிவித்தார். அத்வானியின் வாழ்த்து எனக்கு பெருமையாக உள்ளது'' எனவும் கூறினார்.
கோவாவில் 3 நாள் நடந்த பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் அத்வானி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று கோவாவில் நடந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் மோடி 2014 தேர்தல் பிரச்சார குழு தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இதையடுத்து தன்னை தேர்ந்தெடுத்த தலைவர்களுக்கு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ''எனக்கு பிரச்சார குழு தலைவர் பொறுப்பு கொடுத்து ஆசி வழங்கிய அனைத்து தலைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றுவேன் என உறுதி எடுத்துக் கொள்கிறேன். மேலும் காங்கிரஸ் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்கவும் நான் சபதம் எடுத்துக்கொள்கிறேன்'' என்றார்.
மேலும் அவர், ''என்னுடன் மூத்த தலைவர் அத்வானி தொலைபேசியில் பேசினார். அப்போது என்னை பிரச்சார குழு தலைவராக நியமனம் செய்ததற்கு வாழ்த்து தெரிவித்தார். அத்வானியின் வாழ்த்து எனக்கு பெருமையாக உள்ளது'' எனவும் கூறினார்.
கோவாவில் 3 நாள் நடந்த பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் அத்வானி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.