''சோலார் சைக்கிளில் சொகுசா ஸ்கூலுக்குப் போகலாம், அப்பாவின் டூ-வீலருக்கு டாட்டா காட்டலாம்'' என்கிறார் கீதாஞ்சலி.
காரைக்கால், ஆத்மாலயா பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் கீதாஞ்சலிக்கு அறிவியல் மீதும் சுற்றுச்சூழல் மீதும் அதிக ஆர்வம். இவருடைய அப்பா கணேசன், புதுச்சேரி மின்சாரத் துறையில் லைன்மேனாக இருக்கிறார்.
''ஒருநாள் பள்ளியிலிருந்து வந்துகொண்டிருந்தபோது, டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டேன். அப்போது, வாகனங்களால் ஏற்படும் புகை மற்றும் சூரியனின் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அப்போதுதான் புகை இல்லாத ஒரு வண்டியை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. வலைதளத்தில் சூரிய சக்தி சம்பந்தமாக பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.சூரிய சக்தியினால் இயங்கும் சைக்கிளைக் கண்டுபிடிக்க நினைத்தேன். தரங்கம்பாடியில் உள்ள ஹைடெக் பயிற்சி மையத்துடன் பேசினேன். அவர்களும் எனக்கு ஊக்கம் கொடுத்தனர். அப்படி உருவானதுதான் இந்த சோலார் சைக்கிள்' என்கிறார் உற்சாகமாக.
கீதாஞ்சலி உருவாக்கியிருக்கும் இந்த சோலார் பேனல், 10 வாட்ஸ் மின்சாரத்தைத் தயார் செய்யக்கூடியது. அதோடு, ஒரு 12 வாட்ஸ் பேட்டரியை சைக்கிளில் பொருத்தினால் போதும்.
''சோலார் பேனல் மூலம் மின்சாரம் உற்பத்தி ஆகி, பேட்டரியில் மின்சாரம் சேமிக்கப்படும். பேட்டரியிலிருந்து ஒரு டி.சி. மோட்டாரை இணைத்தால், அது சுழலும்போது சைக்கிளின் பின் சக்கரமும் சுழலும். இதனால் உந்து சக்தி ஏற்பட்டு சைக்கிள் நகரும். இதில் மோட்டாரை ஆன்/ஆஃப் செய்வதற்கு ஒரு சுவிட்ச் பொறுத்த வேண்டும். சோலார் பேனலை எட்டு மணி நேரம் சார்ஜ் செய்தால், நான்கு மணி நேரம் சைக்கிளை ஓட்டலாம். அதோடு, நாம் சைக்கிளை பெடல் செய்து ஓட்டும்போது, 30 சதவிகித சக்தியைப் பேட்டரி தானாகவே ரீசார்ஜ் செய்துகொள்ளும். அதற்கும் ஒரு டைனமோ பொருத்த வேண்டும்'' என்று விளக்கினார் கீதாஞ்சலி.
சைக்கிளின் இழுக்கும் திறன் 40 கிலோ. 25 கி.மீ. வேகத்தில் செல்லும். அதற்குத் தகுந்தபடி பிரேக்குகளைப் பொருத்த வேண்டும். ஒரு சோலார் சைக்கிளைத் தயாரிக்க ஆகும் செலவு 5,000 ரூபாய்.
''அப்பாவின் டூவீலரில் போகும் நேரத்திலேயே இந்த சைக்கிளில் போய்விடலாம். அதனால், 'ஸ்கூலுக்கு டைம் ஆச்சே’னு பதற்றத்தோடு அவரை எதிர்பார்த்துட்டு இருக்க வேண்டாம். அப்பாவின் நேரமும் பெட்ரோல் செலவும் மிச்சமாகும். அதைவிட முக்கியமான விஷயம், வாகனங்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு இதில் இருக்காது. இதே தொழில்நுட்பத்தை மற்ற இரு சக்கர வாகனங்களுக்கும் பயன்படுத்தும் வழிமுறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்'' என்கிறார் கீதாஞ்சலி.
வெற்றிகள் தொடரட்டும் கீதாஞ்சலி!
காரைக்கால், ஆத்மாலயா பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் கீதாஞ்சலிக்கு அறிவியல் மீதும் சுற்றுச்சூழல் மீதும் அதிக ஆர்வம். இவருடைய அப்பா கணேசன், புதுச்சேரி மின்சாரத் துறையில் லைன்மேனாக இருக்கிறார்.
''ஒருநாள் பள்ளியிலிருந்து வந்துகொண்டிருந்தபோது, டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டேன். அப்போது, வாகனங்களால் ஏற்படும் புகை மற்றும் சூரியனின் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அப்போதுதான் புகை இல்லாத ஒரு வண்டியை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. வலைதளத்தில் சூரிய சக்தி சம்பந்தமாக பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.சூரிய சக்தியினால் இயங்கும் சைக்கிளைக் கண்டுபிடிக்க நினைத்தேன். தரங்கம்பாடியில் உள்ள ஹைடெக் பயிற்சி மையத்துடன் பேசினேன். அவர்களும் எனக்கு ஊக்கம் கொடுத்தனர். அப்படி உருவானதுதான் இந்த சோலார் சைக்கிள்' என்கிறார் உற்சாகமாக.
கீதாஞ்சலி உருவாக்கியிருக்கும் இந்த சோலார் பேனல், 10 வாட்ஸ் மின்சாரத்தைத் தயார் செய்யக்கூடியது. அதோடு, ஒரு 12 வாட்ஸ் பேட்டரியை சைக்கிளில் பொருத்தினால் போதும்.
''சோலார் பேனல் மூலம் மின்சாரம் உற்பத்தி ஆகி, பேட்டரியில் மின்சாரம் சேமிக்கப்படும். பேட்டரியிலிருந்து ஒரு டி.சி. மோட்டாரை இணைத்தால், அது சுழலும்போது சைக்கிளின் பின் சக்கரமும் சுழலும். இதனால் உந்து சக்தி ஏற்பட்டு சைக்கிள் நகரும். இதில் மோட்டாரை ஆன்/ஆஃப் செய்வதற்கு ஒரு சுவிட்ச் பொறுத்த வேண்டும். சோலார் பேனலை எட்டு மணி நேரம் சார்ஜ் செய்தால், நான்கு மணி நேரம் சைக்கிளை ஓட்டலாம். அதோடு, நாம் சைக்கிளை பெடல் செய்து ஓட்டும்போது, 30 சதவிகித சக்தியைப் பேட்டரி தானாகவே ரீசார்ஜ் செய்துகொள்ளும். அதற்கும் ஒரு டைனமோ பொருத்த வேண்டும்'' என்று விளக்கினார் கீதாஞ்சலி.
சைக்கிளின் இழுக்கும் திறன் 40 கிலோ. 25 கி.மீ. வேகத்தில் செல்லும். அதற்குத் தகுந்தபடி பிரேக்குகளைப் பொருத்த வேண்டும். ஒரு சோலார் சைக்கிளைத் தயாரிக்க ஆகும் செலவு 5,000 ரூபாய்.
''அப்பாவின் டூவீலரில் போகும் நேரத்திலேயே இந்த சைக்கிளில் போய்விடலாம். அதனால், 'ஸ்கூலுக்கு டைம் ஆச்சே’னு பதற்றத்தோடு அவரை எதிர்பார்த்துட்டு இருக்க வேண்டாம். அப்பாவின் நேரமும் பெட்ரோல் செலவும் மிச்சமாகும். அதைவிட முக்கியமான விஷயம், வாகனங்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு இதில் இருக்காது. இதே தொழில்நுட்பத்தை மற்ற இரு சக்கர வாகனங்களுக்கும் பயன்படுத்தும் வழிமுறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்'' என்கிறார் கீதாஞ்சலி.
வெற்றிகள் தொடரட்டும் கீதாஞ்சலி!