ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சந்திலா மற்றும் இடைத்தரகர்கள் ( புக்கிகள்) இடையே நடைபெற்ற உரையாடல்களின் தொகுப்பை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது.
அந்த உரையாடல்களில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:
சந்திலா: யெஸ்...சொல்லு பிரதர்.நான் (மைதானத்திற்கு) போய் சிக்னல் கொடுக்கிறேன். முதல் ஓவர் முடியட்டும், நான் பார்க்கிறேன்.
அமித் ( புக்கி): முதல் ஓவரை நம்பிக்கையோடு வீசுங்கள்...அப்புறம் அதே நம்பிக்கையோடு இரண்டாவது ஓவரை எங்களுக்காக வீசுங்கள்.
சந்திலா: ஓ.கே.,ஓ.கே. அப்படியே செய்கிறேன்.
அமித்: உங்களது சிக்னல் என்னவாக இருக்கும்?
சந்திலா: நான் என்னுடைய இரண்டு டி சர்ட்டுகளையும் மேலேயும், கீழேயும் இழுக்கிறேன்.அப்புறம் ஓவர் தொடங்கும்போது மேலே பார்க்கிறேன்.
( இந்த ஓவரில் சந்திலா சிக்னல் கொடுக்க மறந்துவிட்டாலும், ஏற்கனவே உறுதி அளித்தபடி 14 ரன்களை வாரி வழங்கினார். ஆனால் சிக்னல் கொடுக்க மறந்துவிட்டதால் சந்திலாவுக்கு ஏற்கனவே கொடுத்த ரூ. 20 லட்சத்தை புக்கி திரும்பக்கேட்டுள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் 20 லட்சத்தை திருப்பிக்கொடுத்துள்ளார் சந்திலா)
_________________________________________________________________________________________________________________
இரண்டாவது உரையாடல், ஸ்ரீசாந்தின் நெருங்கிய நண்பரும், புக்கியுமான ஜிஜூ ஜனார்தனும், புக்கி சந்த்தும் பேசியது ஆகும். மே 9 ஆம் தேதியன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியின்போது இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது. இதில் ஸ்ரீசாந்த் இரண்டாவது ஓவரின்போது குறைந்தது 14 ரன்களாவது வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம். அந்த போட்டியின்போது ஸ்ரீசாந்த் சார்பில் பேசிய ஜிஜூக்கும், புக்கி சந்த்க்கும் இடையே நடைபெற்ற உரையாடல் வருமாறு:
சந்த்: சிக்னல் என்னவாக இருக்கும்?
ஜிஜூ: நான் அவனிடம் ( ஸ்ரீசாந்த்) சொல்லி இருக்கிறேன்.
வழக்கத்தில் இல்லாத ஏதாவது ஒன்றை அவர் செய்யமாட்டார்.இரண்டாவது ஓவர் தொடங்குவதற்கு முன்னதாக தன்னுடைய டவலை (பேண்ட்) பாக்கெட்டில் திணித்துக்கொள்வார்.
சந்த்: பிரதர்...ஓவர் தொடங்குவதற்கு முன்னர் எங்களுக்கு சற்று அவகாசம் கொடுக்குமாறு அவரிடம் அறிவுறுத்துங்கள்,அப்படி செய்தால்தான் நாங்கள் எங்களது புக்கிங்கை தொடங்க முடியும்.
_________________________________________________________________________________
அடுத்ததாக ராஜஸ்தான் ராயல் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியின்போது சந்திலாவுக்கும், அங்கித் சவாணுக்கும் இடையே நடந்த உரையாடல். இந்த போட்டியில் சந்திலா விளையாடவில்லை என்றபோதிலும், சவாணை இரண்டாவது ஓவரின்போது குறைந்தது 13 ரன்களையாவது வழங்க தூண்டி, அவரை சம்மதிக்க வைத்துள்ளார். அந்த உரையாடல் வருமாறு:
சவாண்: நான் வெளியே இருக்கிறேன்.
சந்திலா: ஓ.கே. நான் ஆமாம் என்று சொல்ல வேண்டுமா?
சவாண்: யெஸ்...ஆனால் எவ்வளவு?
சந்திலா: அவர்கள் 12 என்று சொல்கிறார்கள்.
சவாண்: நோ...அது சாத்தியம் என்று நான் கருதவில்லை.அது ரொம்ப அதிகம்.
சந்திலா: அது செய்யப்பபடும் என்று நான் அவர்களுக்கு வாக்கு கொடுத்துவிட்டேன். நான் யெஸ் சொல்லட்டுமா?
சவாண்: ஓகே. யெஸ் சொல்லுங்கள்.
சந்திலா: ஒரு ஓவருக்கு 60 ( லட்சம்) என்று நான் அவர்களிடம் சொல்லிவிட்டேன்.
சவாண்: யெஸ் ஓகே. நான் எனது கைக்கடிகார பட்டையை திருப்பி சிக்னல் கொடுக்கிறேன். மற்றதை நாம் BBM ல் பேசிக்கொள்வோம்.
( பின்னர் இருவருக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் சவாண், எப்பொழுதெல்லாம் இரண்டாவது ஓவரை வீசுகிறாரோ அப்பொழுதெல்லாம் 14 ரன்களோ அல்லது அதற்கு மேலேயோ வழங்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். )
அந்த உரையாடல்களில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:
சந்திலா: யெஸ்...சொல்லு பிரதர்.நான் (மைதானத்திற்கு) போய் சிக்னல் கொடுக்கிறேன். முதல் ஓவர் முடியட்டும், நான் பார்க்கிறேன்.
அமித் ( புக்கி): முதல் ஓவரை நம்பிக்கையோடு வீசுங்கள்...அப்புறம் அதே நம்பிக்கையோடு இரண்டாவது ஓவரை எங்களுக்காக வீசுங்கள்.
சந்திலா: ஓ.கே.,ஓ.கே. அப்படியே செய்கிறேன்.
அமித்: உங்களது சிக்னல் என்னவாக இருக்கும்?
சந்திலா: நான் என்னுடைய இரண்டு டி சர்ட்டுகளையும் மேலேயும், கீழேயும் இழுக்கிறேன்.அப்புறம் ஓவர் தொடங்கும்போது மேலே பார்க்கிறேன்.
( இந்த ஓவரில் சந்திலா சிக்னல் கொடுக்க மறந்துவிட்டாலும், ஏற்கனவே உறுதி அளித்தபடி 14 ரன்களை வாரி வழங்கினார். ஆனால் சிக்னல் கொடுக்க மறந்துவிட்டதால் சந்திலாவுக்கு ஏற்கனவே கொடுத்த ரூ. 20 லட்சத்தை புக்கி திரும்பக்கேட்டுள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் 20 லட்சத்தை திருப்பிக்கொடுத்துள்ளார் சந்திலா)
_________________________________________________________________________________________________________________
இரண்டாவது உரையாடல், ஸ்ரீசாந்தின் நெருங்கிய நண்பரும், புக்கியுமான ஜிஜூ ஜனார்தனும், புக்கி சந்த்தும் பேசியது ஆகும். மே 9 ஆம் தேதியன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியின்போது இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது. இதில் ஸ்ரீசாந்த் இரண்டாவது ஓவரின்போது குறைந்தது 14 ரன்களாவது வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம். அந்த போட்டியின்போது ஸ்ரீசாந்த் சார்பில் பேசிய ஜிஜூக்கும், புக்கி சந்த்க்கும் இடையே நடைபெற்ற உரையாடல் வருமாறு:
சந்த்: சிக்னல் என்னவாக இருக்கும்?
ஜிஜூ: நான் அவனிடம் ( ஸ்ரீசாந்த்) சொல்லி இருக்கிறேன்.
வழக்கத்தில் இல்லாத ஏதாவது ஒன்றை அவர் செய்யமாட்டார்.இரண்டாவது ஓவர் தொடங்குவதற்கு முன்னதாக தன்னுடைய டவலை (பேண்ட்) பாக்கெட்டில் திணித்துக்கொள்வார்.
சந்த்: பிரதர்...ஓவர் தொடங்குவதற்கு முன்னர் எங்களுக்கு சற்று அவகாசம் கொடுக்குமாறு அவரிடம் அறிவுறுத்துங்கள்,அப்படி செய்தால்தான் நாங்கள் எங்களது புக்கிங்கை தொடங்க முடியும்.
_________________________________________________________________________________
அடுத்ததாக ராஜஸ்தான் ராயல் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியின்போது சந்திலாவுக்கும், அங்கித் சவாணுக்கும் இடையே நடந்த உரையாடல். இந்த போட்டியில் சந்திலா விளையாடவில்லை என்றபோதிலும், சவாணை இரண்டாவது ஓவரின்போது குறைந்தது 13 ரன்களையாவது வழங்க தூண்டி, அவரை சம்மதிக்க வைத்துள்ளார். அந்த உரையாடல் வருமாறு:
சவாண்: நான் வெளியே இருக்கிறேன்.
சந்திலா: ஓ.கே. நான் ஆமாம் என்று சொல்ல வேண்டுமா?
சவாண்: யெஸ்...ஆனால் எவ்வளவு?
சந்திலா: அவர்கள் 12 என்று சொல்கிறார்கள்.
சவாண்: நோ...அது சாத்தியம் என்று நான் கருதவில்லை.அது ரொம்ப அதிகம்.
சந்திலா: அது செய்யப்பபடும் என்று நான் அவர்களுக்கு வாக்கு கொடுத்துவிட்டேன். நான் யெஸ் சொல்லட்டுமா?
சவாண்: ஓகே. யெஸ் சொல்லுங்கள்.
சந்திலா: ஒரு ஓவருக்கு 60 ( லட்சம்) என்று நான் அவர்களிடம் சொல்லிவிட்டேன்.
சவாண்: யெஸ் ஓகே. நான் எனது கைக்கடிகார பட்டையை திருப்பி சிக்னல் கொடுக்கிறேன். மற்றதை நாம் BBM ல் பேசிக்கொள்வோம்.
( பின்னர் இருவருக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் சவாண், எப்பொழுதெல்லாம் இரண்டாவது ஓவரை வீசுகிறாரோ அப்பொழுதெல்லாம் 14 ரன்களோ அல்லது அதற்கு மேலேயோ வழங்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். )