பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்படுமா? என்பது ஜூன் மாதம் முதல் வாரத்தில் தெரியவரும். இதற்காக கட்டண நிர்ணயக்குழு விரைவில் பொது மக்கள் மற்றும் கல்லூரிகளிடம் இருந்து கருத்துக்களை கேட்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளின் மொத்த இடங்களில் 65 சதவீத சீட்டுக்கள் அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அதுபோல் சிறுபான்மை தொழில் கல்வி நிறுவனங்கள் 50 சதவீத சீட்டுக்களை அரசுக்கு ஒதுக்கீடு செய்து வருகின்றன. தனியார் சுயநிதி தொழிற்கல்வி நிறுவனங்களில் இருந்து பெறும் அரசு ஒதுக்கீடு சீட்டுக்கள் பொது கவுன்சலிங் முறை மூலம் நிரப்பப்படுகின்றன.
தனியார் சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டணத்தை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு நிர்ணயம் செய்கிறது. நீதிபதி தலைமையிலான சுயநிதி தொழிற் கல்லூரிகளுக்கான கல்வி கட்டண நிர்ணய குழு தனியார் சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளின் உள் கட்டமைப்பு வசதி மற்றும் தரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கட்டணங்களை நிர்ணயம் செய்கிறது.
தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு அரசு ஒதுக்கீடு சீட்டுகளுக்கு ஒரு கல்வியாண்டுக்கு 32 ஆயிரத்து 500 ரூபாயும், தேசிய தரச்சான்றிதழ் பெற்ற கல்லூரிகளுக்கு 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதுபோல் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு சீட்டுக்களுக்கு( மேனேஜ்மென்ட் கோட்டா) 62 ஆயிரத்து 500 ரூபாயும், தேசிய தரச்சான்றிதழ் பெற்றிருந்த கல்லூரிகளுக்கு 70 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
அதுபோல் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு சீட்டுகளுக்கு (எம்.பி.பி.எஸ்.) 12 ஆயிரத்து 290 ரூபாயும், முதலாம் ஆண்டு பல் மருத்துவ படிப்புக்கு 10 ஆயிரத்து 290 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும், பி.டி.எஸ். எனப்படும் பல் மருத்துவ படிப்புக்கு ஒரு லட்சம் ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில் தனியார் சுயநிதி இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்களில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் விரைவில் உயர்த்தப்படவுள்ளது. இது தொடர்பாக சுயநிதி தொழிற்கல்வி கல்லூரிகளுக்கான கல்வி கட்டண நிர்ணய குழு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: தனியார் சுயநிதி தொழிற் கல்லூரிகளில் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு 2013&14 மற்றும் 2014&15ம் கல்வியாண்டிற்கு பொறியியல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டபடிப்புகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், மற்றும பொது மக்கள் தங்களது கருத்துக்களை மற்றும் முறையீட்டு மனுக்களை தலைவர், சுயநிதி தொழிற் கல்லூரிகளுக்கான கல்வி கட்டண நிர்ணய குழு, தொழில் நுட்ப கல்வி இயக்க அலுவலர் குடியிருப்பு, காந்தி மண்டபம் சாலை, சென்னை&25 என்ற முகவரிக்கு மே மாதம் 27ஆம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங் ஜூன் மாதம் தொடங்குகிறது. எனவே புதிய கல்வி கட்டணம் குறித்து ஜூன் மாதம் முதல் வாரம் அறிவிப்பு வெளியாகும் என்று உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் தனியார் சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளின் மொத்த இடங்களில் 65 சதவீத சீட்டுக்கள் அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அதுபோல் சிறுபான்மை தொழில் கல்வி நிறுவனங்கள் 50 சதவீத சீட்டுக்களை அரசுக்கு ஒதுக்கீடு செய்து வருகின்றன. தனியார் சுயநிதி தொழிற்கல்வி நிறுவனங்களில் இருந்து பெறும் அரசு ஒதுக்கீடு சீட்டுக்கள் பொது கவுன்சலிங் முறை மூலம் நிரப்பப்படுகின்றன.
தனியார் சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டணத்தை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு நிர்ணயம் செய்கிறது. நீதிபதி தலைமையிலான சுயநிதி தொழிற் கல்லூரிகளுக்கான கல்வி கட்டண நிர்ணய குழு தனியார் சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளின் உள் கட்டமைப்பு வசதி மற்றும் தரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கட்டணங்களை நிர்ணயம் செய்கிறது.
தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு அரசு ஒதுக்கீடு சீட்டுகளுக்கு ஒரு கல்வியாண்டுக்கு 32 ஆயிரத்து 500 ரூபாயும், தேசிய தரச்சான்றிதழ் பெற்ற கல்லூரிகளுக்கு 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதுபோல் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு சீட்டுக்களுக்கு( மேனேஜ்மென்ட் கோட்டா) 62 ஆயிரத்து 500 ரூபாயும், தேசிய தரச்சான்றிதழ் பெற்றிருந்த கல்லூரிகளுக்கு 70 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
அதுபோல் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு சீட்டுகளுக்கு (எம்.பி.பி.எஸ்.) 12 ஆயிரத்து 290 ரூபாயும், முதலாம் ஆண்டு பல் மருத்துவ படிப்புக்கு 10 ஆயிரத்து 290 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும், பி.டி.எஸ். எனப்படும் பல் மருத்துவ படிப்புக்கு ஒரு லட்சம் ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில் தனியார் சுயநிதி இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்களில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் விரைவில் உயர்த்தப்படவுள்ளது. இது தொடர்பாக சுயநிதி தொழிற்கல்வி கல்லூரிகளுக்கான கல்வி கட்டண நிர்ணய குழு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: தனியார் சுயநிதி தொழிற் கல்லூரிகளில் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு 2013&14 மற்றும் 2014&15ம் கல்வியாண்டிற்கு பொறியியல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டபடிப்புகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், மற்றும பொது மக்கள் தங்களது கருத்துக்களை மற்றும் முறையீட்டு மனுக்களை தலைவர், சுயநிதி தொழிற் கல்லூரிகளுக்கான கல்வி கட்டண நிர்ணய குழு, தொழில் நுட்ப கல்வி இயக்க அலுவலர் குடியிருப்பு, காந்தி மண்டபம் சாலை, சென்னை&25 என்ற முகவரிக்கு மே மாதம் 27ஆம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங் ஜூன் மாதம் தொடங்குகிறது. எனவே புதிய கல்வி கட்டணம் குறித்து ஜூன் மாதம் முதல் வாரம் அறிவிப்பு வெளியாகும் என்று உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.