இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் நாராயணமூர்த்தி நேற்று குஜராத்தின் வடோடரா நகரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரி நரேந்திர மோடியின் செயல்பாடு, நிர்வாகத் திறமை குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து மூர்த்தி கூறியதாவது:-
நாட்டின் சிறந்த நிர்வாகியாக நரேந்திர மோடி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார் என்று என்னால் கூற முடியும். நான் அகமதாபாத், வடோடரா நகரங்களுக்கு வந்தபோது அங்குள்ள சாலைகளின் தரத்தையும், உள்கட்டமைப்பு வசதிகளையும், மின்சார விநியோகத்தையும் பார்த்தேன். நமக்கு கிடைத்துள்ள தகவல்கள், மோடியின் மாநிலம் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளதை காட்டுகின்றன.
என்னிடம் மக்கள் முன்னேற்றம், கிராமப்புற சுகாதாரம், கல்வி ஆகியவை குறித்து தகவல்கள் இல்லை. அதனால் அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது.
ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பான செயல்பாடுகளை நாம் அங்கீகரிக்க வேண்டும். குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. கர்நாடகா தகவல் தொழில் நுட்பம் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு வாகன உற்பத்தி துறையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கு பதிலளித்து மூர்த்தி கூறியதாவது:-
நாட்டின் சிறந்த நிர்வாகியாக நரேந்திர மோடி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார் என்று என்னால் கூற முடியும். நான் அகமதாபாத், வடோடரா நகரங்களுக்கு வந்தபோது அங்குள்ள சாலைகளின் தரத்தையும், உள்கட்டமைப்பு வசதிகளையும், மின்சார விநியோகத்தையும் பார்த்தேன். நமக்கு கிடைத்துள்ள தகவல்கள், மோடியின் மாநிலம் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளதை காட்டுகின்றன.
என்னிடம் மக்கள் முன்னேற்றம், கிராமப்புற சுகாதாரம், கல்வி ஆகியவை குறித்து தகவல்கள் இல்லை. அதனால் அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது.
ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பான செயல்பாடுகளை நாம் அங்கீகரிக்க வேண்டும். குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. கர்நாடகா தகவல் தொழில் நுட்பம் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு வாகன உற்பத்தி துறையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.