தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, ராஜபாளையம் தெருவில் உள்ள வீட்டில் தங்களின் ஐந்து வயது மகன் புகழரசுவோடு மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறனர் உமாதேவி - கிருஷ்ணன் தம்பதி.
''நீதிபதி சந்துரு சாரோட தீர்ப்புனாலதான் இன்னிக்கு தலைநிமிர்ந்து வாழ்றோம்!'' என நெகிழ்ந்த உமாதேவி, கடந்தகால நினைவுகளுக்குள் சென்றார்.
''அந்த நாளை இப்ப நெனச்சாலும் மனசெல்லாம் கொந்தளிக்குது. விபசார வழக்குல எங்களை கைது செய்த போலீஸ், எங்களை எதுவுமே பேச விடாததோட, செல்போனையும் வாங்கி வெச்சுக்கிட்டாங்க. மறுநாள் எல்லா பத்திரிகைகள்லயும் போட்டோவோட செய்தி வந்து, அவமானத்தால நிலைகுலைஞ்சு போனோம். 'இனி எப்படி வெளியில தலைகாட்டப் போறோம்'னு சுக்குநூறா மனசு உடைஞ்சுடுச்சு. ஜாமீன்ல வெளியில வந்த நாங்க... 'தற்கொலை பண்ணிக்கலாமா'னுகூட யோசிச்சோம். 'அப்படி செஞ்சா, நம்ம மேல உள்ள கறையைத் துடைக்க முடியாமலே போயிடும்... சட்டரீதியா போராடி, வாழ்ந்து காட்டினாதான், கௌரவத்தை மீட்டெடுக்க முடியும்'னு முடிவெடுத்தோம்.
நீதிபதி சந்துரு சாரோட தீர்ப்பு வெளியாகி, அது பத்திரிகைகள்ல வந்த அன்னிக்கு எங்களுக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள். 'உறுதியா இருந்து சாதிச்சுக் காட்டிட்டீங்க'னு நண்பர்கள், சொந்தக்காரங்க எல்லாரும் சொன்னாங்க. எங்களை விட்டு தள்ளிப் போயிருந்தவங்க எல்லாம்கூட, மறுடியும் இணக்கமானாங்க. தீர்ப்புக்கு பிறகுதான் கல்யாணம், காதுகுத்து, கிரகப்பிரவேசம்னு நாலு விசேஷங்களுக்கு போகவே ஆரம்பிச்சோம். வழக்கு நடந்துக்கிட்டு இருந்ததால நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாதி சம்பளம், இன்கிரிமென்ட் எல்லாமே, மறுபடியும் கிடைச்சுடுச்சு!'' என்று சந்தோஷம் பொங்கச் சொன்ன உமாதேவி,
''வீண் பழி சுமத்தப்பட்டவங்க, தைரியத்தோட சட்டத்தை துணையா சேர்த்துக்கிட்டா... நிச்சயம் ஜெயிக்கலாம்கறதுக்கு நாங்களே சிறந்த எடுத்துக்காட்டு'' என்றார் பெருமையுடன்.
''நீதிபதி சந்துரு சாரோட தீர்ப்புனாலதான் இன்னிக்கு தலைநிமிர்ந்து வாழ்றோம்!'' என நெகிழ்ந்த உமாதேவி, கடந்தகால நினைவுகளுக்குள் சென்றார்.
''அந்த நாளை இப்ப நெனச்சாலும் மனசெல்லாம் கொந்தளிக்குது. விபசார வழக்குல எங்களை கைது செய்த போலீஸ், எங்களை எதுவுமே பேச விடாததோட, செல்போனையும் வாங்கி வெச்சுக்கிட்டாங்க. மறுநாள் எல்லா பத்திரிகைகள்லயும் போட்டோவோட செய்தி வந்து, அவமானத்தால நிலைகுலைஞ்சு போனோம். 'இனி எப்படி வெளியில தலைகாட்டப் போறோம்'னு சுக்குநூறா மனசு உடைஞ்சுடுச்சு. ஜாமீன்ல வெளியில வந்த நாங்க... 'தற்கொலை பண்ணிக்கலாமா'னுகூட யோசிச்சோம். 'அப்படி செஞ்சா, நம்ம மேல உள்ள கறையைத் துடைக்க முடியாமலே போயிடும்... சட்டரீதியா போராடி, வாழ்ந்து காட்டினாதான், கௌரவத்தை மீட்டெடுக்க முடியும்'னு முடிவெடுத்தோம்.
நீதிபதி சந்துரு சாரோட தீர்ப்பு வெளியாகி, அது பத்திரிகைகள்ல வந்த அன்னிக்கு எங்களுக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள். 'உறுதியா இருந்து சாதிச்சுக் காட்டிட்டீங்க'னு நண்பர்கள், சொந்தக்காரங்க எல்லாரும் சொன்னாங்க. எங்களை விட்டு தள்ளிப் போயிருந்தவங்க எல்லாம்கூட, மறுடியும் இணக்கமானாங்க. தீர்ப்புக்கு பிறகுதான் கல்யாணம், காதுகுத்து, கிரகப்பிரவேசம்னு நாலு விசேஷங்களுக்கு போகவே ஆரம்பிச்சோம். வழக்கு நடந்துக்கிட்டு இருந்ததால நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாதி சம்பளம், இன்கிரிமென்ட் எல்லாமே, மறுபடியும் கிடைச்சுடுச்சு!'' என்று சந்தோஷம் பொங்கச் சொன்ன உமாதேவி,
''வீண் பழி சுமத்தப்பட்டவங்க, தைரியத்தோட சட்டத்தை துணையா சேர்த்துக்கிட்டா... நிச்சயம் ஜெயிக்கலாம்கறதுக்கு நாங்களே சிறந்த எடுத்துக்காட்டு'' என்றார் பெருமையுடன்.