தேவையானவை: அரைக்கீரை - 2 கட்டு, தக்காளி - 3, சின்ன வெங்காயம் - 100 கிராம், பச்சை மிளகாய் - 4, புளிக் கரைசல் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, உளுத்தம்பருப்பு - 50 கிராம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரைக்கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, அலசி வடிகட்டிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கவும். உளுத்தம்பருப்பை வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து (உளுத்தம்பருப்பு பொடி தவிர) தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கீரை நன்றாக வெந்து, மசிந்த பின், வறுத்து பொடியாக்கிய உளுந்தை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து, உப்பு சரிபார்த்து இறக்கவும்.
சாதத்துடன் பிசைந்தும், சப்பாத்தியோடு தொட்டும் சாப்பிட சுவையாக இருக்கும்.
செய்முறை: அரைக்கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, அலசி வடிகட்டிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கவும். உளுத்தம்பருப்பை வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து (உளுத்தம்பருப்பு பொடி தவிர) தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கீரை நன்றாக வெந்து, மசிந்த பின், வறுத்து பொடியாக்கிய உளுந்தை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து, உப்பு சரிபார்த்து இறக்கவும்.
சாதத்துடன் பிசைந்தும், சப்பாத்தியோடு தொட்டும் சாப்பிட சுவையாக இருக்கும்.