தேவையானவை: சேனைக்கிழங்கு - 250 கிராம், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், புளி - எலுமிச்சம்பழ அளவு (தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேனையை தோல் சீவி, பொடியாக நறுக்கி, புளித் தண்ணீரில் சேர்த்து... உப்பு, மஞ்சள்தூள் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு, தண்ணீரை வடித்துவிடவும். வாணலியில் எண் ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வடிகட்டி வைத்த சேனையைப் போட்டு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு மொறுமொறுவென்று வரும்வரை கிளறி இறக்கவும்.
குறிப்பு: சேனை அதிகம் வேகக்கூடாது. சிறிது கொதித்த உடன் தண்ணீர் வடிக்கட்டி விட வேண்டும். நன்றாக வெந்துவிட்டால் மொறுமொறுப்பு வராது.
செய்முறை: சேனையை தோல் சீவி, பொடியாக நறுக்கி, புளித் தண்ணீரில் சேர்த்து... உப்பு, மஞ்சள்தூள் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு, தண்ணீரை வடித்துவிடவும். வாணலியில் எண் ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வடிகட்டி வைத்த சேனையைப் போட்டு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு மொறுமொறுவென்று வரும்வரை கிளறி இறக்கவும்.
குறிப்பு: சேனை அதிகம் வேகக்கூடாது. சிறிது கொதித்த உடன் தண்ணீர் வடிக்கட்டி விட வேண்டும். நன்றாக வெந்துவிட்டால் மொறுமொறுப்பு வராது.